பாரதிய ஜனதா கட்சியின் அடுத்த தேசியத் தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்காக 3 தலைவர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
பாஜகவின் தேசிய தலைவராக ஜே.பி.நட்டா பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் 2023ஆம் ஆண்டே முடிந்துவிட்டது. ஆனால் 2024 மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு நீட்டிக்கப்பட்டது. பாஜக அமைப்புத் தேர்தல்கள் பெரும்பாலான மாநிலங்களில் நிறைவடைந்த நிலையில், தற்போது புதிய தேசியத் தலைவரை நியமிக்கும் பணிகள் தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசியத் தலைவர் தேர்தல் செயல்முறையை மேற்பார்வையிட விரைவில் ஒரு தேர்தல் குழு அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் வேட்புமனு தாக்கல், ஆய்வு மற்றும் தேவைப்பட்டால் வாக்களிப்பு ஆகியவை நடக்கும். புதிய தலைவராக யார் வரலாம் என்ற விவாதம் கட்சிக்குள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மூன்று முக்கிய பெயர்கள் போட்டியில் உள்ளதாக கூறப்படுகிறது:
தர்மேந்திர பிரதான்: பாஜக தேசியத் தலைவர் போட்டியில் 3 பேரின் பெயர்கள் அடிபடத் தொடங்கியுள்ளன. ஒடிசாவைச் சேர்ந்த முக்கிய ஓபிசி தலைவரும், மத்திய தலைமைக்கு நெருக்கமாக இருப்பவருமான மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், கட்சியின் தலைவர் பதவிக்கான போட்டியில் உள்ள முக்கியப் பிரமுகர்களில் ஒருவராக உள்ளார்.
மனோகர் லால் கட்டார்: ஹரியானா முதல்வராக இருந்து தற்போது மத்திய அமைச்சராகியுள்ள மனோகர் லால் கட்டார், கட்சி மற்றும் நிர்வாக அனுபவத்தைக் கொண்டவர். எனவே இவரும் தேசியத் தலைவர் பந்தயத்தில் உள்ளார்.
சிவராஜ் சிங் சவுகான்: இவர் மற்றொரு முக்கியப் போட்டியாளராக உருவெடுத்துள்ளார். முன்னாள் மத்தியப் பிரதேச முதல்வரும், தற்போதைய மத்திய அமைச்சருமான இவர், கட்சியின் அடிமட்டத்திலிருந்து அனுபவமுள்ள வெகுஜனத் தலைவராகக் பார்க்கப்படுகிறார்.
தற்போதைய நிலவரப்படி, நட்டா இரண்டாவது முழு பதவிக்காலத்தை கோருவாரா அல்லது கட்சி புதிய முகத்தைத் தேர்ந்தெடுப்பாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. கட்சியின் இறுதித் தேர்வு, நிறுவன அனுபவம், பிராந்திய பிரதிநிதித்துவம் மற்றும் சாதி சமநிலை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Read more: இன்ஸ்டாகிராமில் அதிக வருமானம் பெறுவது எப்படி..? இதை மட்டும் கரெக்டா ஃபாலோ பண்ணுங்க..!!