டாஸ்மாக் கடையை ஏன் தடை செய்யவில்லை? இரட்டை நிலைப்பாடு ஏன்? தமிழக அரசுக்கு சரமாரி உயர்நீதிமன்றம் கேள்வி..

newproject11 1748241643 1

ஆன்லைன் ரம்மியை தடை செய்த அரசு, டாஸ்மாக் கடையை ஏன் தடை செய்யவில்லை? என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

மதுரை கைத்தறி நகரில் டாஸ்மாக் கடை திறக்க தடை கோரி மேகலா என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதிகள் எஸ்.என். சுப்பிரமணியம், மரிய க்ரீட்டா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர், டாஸ்மாக்கில் உரிய முறைப்படி மது விற்பனை செய்யப்படுகிறது. அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்தால், 30 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.


அப்போது நீதிபதிகள் “ ஆன்லைன் ரம்மியை தடை செய்த அரசு, டாஸ்மாக் கடையை ஏன் தடை செய்யவில்லை? ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது என ஆன்லைன் ரம்மியை மாநில அரசு தடை செய்து வரைமுறைப்படுத்தியது. டாஸ்மாக் மதுபானம் விற்பனை செய்வதாலும், பொது சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. டாஸ்மாக் மதுபான கடை மற்றும் மனமகிழ் மன்றங்களை ஏன் அரசு தடைசெய்யவில்லை.. ஒருபுறம் மது கடை மறுபுறம் மறு வாழ்வு மையம் அரசு சார்பில் அமைப்பது ஏன்? மக்கள் நலன் அரசு, மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது.

மக்கள் நலன் அரசு அரசியலமைப்பின் விதிமுறைகளுக்கு மாறாக செயல்படலாமா? மக்களுக்கு வேலை கொடுக்கும் வகையில் டான்சி, டீ தூள் தயாரிப்பு ஆலை ஆகியவற்றை அரசு தொடங்கலாம்.. உடலுக்கு கேடு விளைவிக்கும் டாஸ்மாக் மது கடைகளை திறந்து நடத்தலாமா? மாணவர்கள் வன்முறை நிறைந்த சினிமாக்கள், டாஸ்மாக் போன்ற சூழலில் சிக்கித்தவிக்கின்றனர். பொது சுகாதாரம், ஆரோக்கியம் விஷயத்தில் இரட்டை நிலைப்பாடு ஏன்? ” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

Read More : அடித்துக் கொல்லப்பட்டவர் தீவிரவாதியா? சிவகங்கை லாக் அப் டெத் குறித்து நீதிபதிகள் சரமாரி கேள்வி..

English Summary

The Madurai branch of the Madras High Court has questioned why the government, which banned online rummy, did not ban the TASMAC shop.

RUPA

Next Post

தலை முதல் பாதம் வரை 18 இடங்களில் காயம்.. பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்..!! சிவகங்கை லாக்அப் டெத்...!

Mon Jun 30 , 2025
அஜித் குமார் உடலில் 18 இடங்களில் காயம் இருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. தலை, கழுத்து, தொடை என பல பகுதிகளில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் மடப்புரம் அருகே பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்தக்கோவிலில் 28 வயதான அஜித் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.கடந்த வெள்ளிக்கிழமை மதுரையில் இருந்து நிக்தா என்பவரும் அவருடைய தாயார் சிவகாமியும் மடப்புரம் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். கோயிலுக்கு வந்ததும் தனது […]
lockup death 1

You May Like