தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழக மாணவர்கள் பங்கேற்காதது ஏன்…..? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி….!

இந்த வருடம் டெல்லியில் நடைபெற்று வரும் தேசிய விளையாட்டுப் போட்டியில் தமிழக மாணவர்கள் பங்கேற்காமல் போனதற்கு அதிகாரிகளே காரணம் என்று உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கம் குற்றம் சுமத்தி இருக்கிறது. அகில இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுவின் சார்பாக வருடம் தோறும் தேசிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த போட்டியில் பங்கேற்றுக் கொள்ளும் மாணவர்களை அந்தந்த மாநில அரசு தேர்வு செய்து போட்டிக்கு அனுப்புகின்றனர்.


அதன்படி இந்த வருடத்திற்கான விளையாட்டு போட்டியில் கடந்த 6 தேதி டெல்லியில் ஆரம்பமானது. ஆனால் இந்த போட்டியில் பங்கேற்க வேண்டிய மாணவர்களை தமிழக அரசு இந்த வருடம் தேர்வு செய்யவில்லை. இதனால் சுமார் 4000 மாணவ,மாணவிகள் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க இயலாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மாநில முதன்மை கல்வி ஆய்வாளர் மே மாதத்தில் பொதுத் தேர்வுகள் இருந்ததாலும், கோடை விடுமுறை காரணமாகவும் மாணவர்களை போட்டிகளுக்கு அனுப்ப போதிய அவகாசம் இல்லை என்று கூறினார்.

இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பினர் 2 பிரிவாக பிரிந்து செயல்படுவதால் முறையான தகவல் பள்ளி கல்வித்துறைக்கு கிடைக்கவில்லை எனவும் குற்றம் சுமத்தினார். இது குறித்து பேசிய உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கச் செயலாளர் ராஜா சுரேஷ் அதிகாரிகளின் கவனக்குறைவு காரணமாக தான் தமிழக மாணவர்கள் பங்கேற்க இயலாமல் போனது என்று கூறினால் விளையாட்டுக்கு ஒதுக்கப்படும் நிதியை அதிகரிக்க வேண்டும் எனவும் ராஜா சுரேஷ் கேட்டுக் கொண்டார்.

அதோடு இது தொடர்பாக விளக்கம் முறையாக வழங்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Next Post

வரும் 13ஆம் தேதி அதிமுகவின் மாவட்ட செயலாளர் கூட்டம்…..! அதிமுக தலைமை அறிவிப்பு…..!

Fri Jun 9 , 2023
அதிமுகவின் மாவட்ட செயலாளர் கூட்டம் வரும் 13ஆம் தேதி நடைபெறும் என்று அதிமுகவின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அதிமுகவின் தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிமுகவின் பொது செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் வருகின்ற 13ஆம் தேதி அதிமுகவின் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறுகிறது. இதில் அனைத்து மாவட்ட […]
எம்ஜிஆர் சிலையிடம் ராஜினாமா கடிதம்..!! கதறி கதறி அழுத அதிமுக பிரமுகர்..!! என்ன காரணம்..?

You May Like