#கோவை :காதல் மனைவியே கணவன் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொலை செய்த கொடூரம்..!

கோவை மாவட்ட பகுதியில் உள்ள சுந்தராபுரம் பிள்ளையார்புரம் சிட்கோ பகுதியில் எலக்ட்ரீசியனான ரங்கன் என்பவர் தனது மனைவி ஈஸ்வரி என்பவரை கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது.


ரங்கனுக்கு குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் கணவன் – மனைவிக்கு ஆகியோர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அத்துடன் ரங்கன் குடிபோதையில் மனைவி மற்றும் குழந்தைகளை போட்டு அடித்து உதைத்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று ரங்கன் வழக்கம் போல் குடித்துவிட்டு ஈஸ்வரியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி ரங்கனின் தலையில் கிரைண்டர் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்துள்ளார். 

இதனை தொடர்ந்து அவர் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்தார். மேலும் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே உயிரிழந்துள்ளார். இதன்பேரில் தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் ஈஸ்வரி அளித்த வாக்குமூலத்தினை தொடர்ந்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

1newsnationuser5

Next Post

#சென்னை :தவறான சிகிச்சையால் தனது காலை இழந்த இளைஞர்..!

Thu Dec 1 , 2022
சென்னை மாநகர பகுதியில் உள்ள கோட்டூர்புரம் பகுதியில் பெயிண்டர் விஜய் தனது மனைவி வேளாங்கண்ணி மற்றும் ஒரு மகனுடன் வசித்து வருகிறார். சென்ற செப்டம்பர் மாதம் பார்க் ஒன்றில் தனது குழந்தையுடன் விளையாட அழைத்து சென்றுள்ளார்.  அப்போது தவறி கீழே விழுந்ததில் விஜயின் வலது கால் முட்டியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே ராயப்பேட்டையில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு சென்ற போது எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது எனவே கட்டுப்போட வேண்டும் […]
Screenshot 2022 12 01 12 05 16 97 a71c66a550bc09ef2792e9ddf4b16f7a

You May Like