இணைய மோசடியில் ஈடுபட்டு பணத்தை இழந்த மனைவி!… முத்தலாக் கூறி விவாகரத்து செய்த கணவர்!…

ஒடிசாவில் சைபர் மோசடியில் பணத்தை இழந்த மனைவியை ‘முத்தலாக்’ செய்த கணவர் மீது வழக்குப் பதிவு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.


ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயதான பெண் ஏப்ரல் 1-ஆம் தேதி புகார் ஒன்றினை அளித்துள்ளார். அதில் சைபர் மோசடியில் ரூ.1.5 லட்சம் பணம் இழந்ததாகவும் இந்தத் தகவலை தன் கணவரிடம் தெரிவித்ததால் அவர் முத்தலாக் கூறி தன்னை விவகாரத்து செய்துவிட்டதாகவும் அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கணவர் வரதட்சணை கேட்டும் தன்னை துன்புறுத்தியதாக அந்தப் புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் அந்தப் பெண்ணின் கணவர் மீது, முஸ்லிம் பெண்களின் திருமண உரிமை பாதுகாப்பு சட்டம் மற்றும் வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கேந்திராபாரா காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது. 2017-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் முத்தலாக் நடைமுறை மீது தடை விதித்தது. இதன்படி, இந்தியாவில் முத்தலாக் கூறி விவகாரத்து செய்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser3

Next Post

SBI வங்கியில் வேலைவாய்ப்பு!... 1031 காலிப்பணியிடங்கள்!... ரூ.41,000 வரை சம்பளம்!... உடனே விண்ணப்பியுங்கள்!

Tue Apr 11 , 2023
SBI வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நாட்டின் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் (SBI- State Bank of India)காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ‘Channel Manager’ மற்றும் ‘Support Officer’ ஆகிய 1031 காலிப்பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணிக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பிற்கு ஏற்கனவே […]
SBI PO 5 1

You May Like