பீகாரில் மாநில பகுதியில் உள்ள ராஜ்னி நயநகரில் கிருஷ்ணா பாசுகி (25) என்பவர் தனது மனைவி அனிதாவுடன் வசித்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் என நான்கு குழந்தைகள் உள்ளனர்.
கணவர் பஞ்சாபின் ஒரு மண்டியில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கிருஷ்ணா இரண்டு மாதங்களுக்கு முன்னரே தனது குடும்பத்தை பார்க்க ராஜ்னி நயநகர் சென்றுள்ளார்.
அப்போது அவரது மனைவி அனிதா தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். திரும்பி தனது வீட்டிற்கு வராமல் தாமதப்படுத்தியதால் கிருஷ்ணா கோபமடைந்துள்ளார். அதனால் கத்தியால் அவரது அந்தரங்க உறுப்பை அவரே வெட்டிக் கொண்டார்.
அலரல் சத்தத்துடன் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த அவரை கண்ட உறவினர்கள், அவரை மீட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது கிருஷ்ணாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிகிச்சையில் அவர் தற்போது அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் கிருஷ்ணா சிலநாட்களாக மனநலக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிய வந்துள்ளது.