பெரும்பாலான பெண்களுக்கு பளபளப்பான முடி வேண்டும் என்கிற ஆசை இருக்கும். சருமத்தை போலவே முடியையும் நாம் கொஞ்சம் நேரம் எடுத்து பார்த்துக் கொண்டால் அதையும் நன்றாக வளர்க்கலாம். இரவில் உறங்க செல்வதற்கு முன் இந்த டிப்ஸ்யை பின்பற்றினால் கண்டிப்பாக இயற்கை ரீதியாக முடி வளர செய்யும். அப்படி இரவில் செய்ய வேண்டிய முடி பராமரிப்பு டிப்ஸ்களை இங்கு பார்ப்போம்.
இரவில் உறங்க செல்வதற்கு முன், முடியை சேர்வது முடி வளர உதவும் என கூறப்படுகிறது. இயற்கையான முறையில் கூந்தல் வளர செய்ய, என்னை தடவிய பின் முடியை வார வேண்டும். இது இரவில் உறங்கும் போது நாம் பிரண்டு படுக்கையில், தலையில் சிக்கு விழுவதையும், முடி உடைவதையும் தடுக்கும். அப்படி தலை சீவும் போது பெரிய பல் இருக்கும் சீப்பை பயன்படுத்த வேண்டும். இது உங்கள் முடியை பாதுகாப்பாக சீவுவதற்கு உதவும்.
இரவு உறங்க செல்லும் முன், தலையில் ஹேர் மாஸ்க்களை உபயோகிக்கலாம். இது உச்சந்தலையை மாய்ஸ்டிரைஸ் செய்வதுடன், முடி உடையாமல் தடுக்க உதவும். இந்த ஹேர் மாஸ்க்கிற்காக, ஆர்கன் என்னை உபயோகிக்கலாம். இதனுடன் தேங்காய் எண்ணெய் மற்றும், விளக்கெண்ணெய் சேர்த்து பயன்படுத்தலாம். முடி இறுதியிலும், உச்சந்தலையிலும் இந்த எண்ணையை தேய்க்கலாம். தேய்த்த பின்பு பின்னல் அல்லது, கொண்டை போட்டுக் கொள்ள வேண்டும்.
தலையில் எப்போதும் விரித்துப்போட்டுக்கொண்டும், அல்லது கொண்டை போட்டுக்கொண்டும் இருப்பதால் முடி உடையும் அபாயம் இருக்கிறது. குறிப்பாக இரவில், ஃப்ரீ-ஹேர் விட்டுக்கொண்டு படுத்தால் முடி உடையவும், அதிக சிக்கு விழவும் வாய்ப்புள்ளது. எனவே, இரவில் உறங்க செல்லும் முன்பு, முடியை லூசாக பின்னிக்கொள்ள வேண்டும். இது, முடி உடைவு மற்றும் முடி இழப்பு அபாயத்தை தடுக்கிறது.
பலர், இரவில் தலைக்கு குளிக்கும் பழக்கம் கொண்டிருப்பவர்கள் அப்படியே உறங்க செல்வர். இப்படி ஈரமான கூந்தலுடன் உறங்க செல்கையில் முடி உடையும் அபாயம் உள்ளது. எனவே, இரவில் உறங்க செல்லும் முன்பு, தலையை ட்ரை செய்து விட்டு உறங்க வேண்டும். இதனால், முடியை நன்கு பராமறிக்க உதவும்.