தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடப்படுமா..? அமைச்சர் சொன்ன பதில்..

தமிழகத்தில் இன்ஃப்ளுயன்ஸா காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் பள்ளிகள் மூடப்படுமா என்பது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்..

தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்ஃப்ளுயன்ஸா காய்ச்சல் வேகமாக பரவுகிறது… இந்த காய்ச்சல் சில குறிப்பிட்ட இன்ஃப்ளூயென்சா வைரஸால் ஏற்படும் சுவாசக் கோளாறுகளால் இந்த `ஃபுளு காய்ச்சல்’ ஏற்படுகிறது. மழைக்காலம் தொடங்கியபின் வழக்கமாக காய்ச்சல் அதிகரிக்கும் என்றாலும் இம்முறை இது மிக அதிகமாக உள்ளதாகவும், மருத்துவமனைகளில் காய்ச்சல் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


தற்போது குழந்தைகளிடையே இந்த `ப்ளூ’ வகை காய்ச்சல் வேகமாக பரவுவதாகவும், இது 3 முதல் 4 நாட்கள் நீடிக்கிறது என்றும் கூறப்படுகிறது… கடுமையான காய்ச்சல், உடல் சில்லிடுதல், அதீத சோர்வு, தலைவலி, உடல்வலி, வறட்டு இருமல், தொண்டைப் புண், வாந்தி மற்றும் அடிவயிற்று வலி உள்ளிட்டவை இதன் முக்கிய அறிகுறிகளாகும். இருமல் குறைய 2 வாரங்கள் கூட ஆகலாம். குழந்தைகளுக்கு ஒரே மாதத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை இந்த காய்ச்சல் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புண்டு. எனவே தமிழகம் முழுவதும் 1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்..

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் பள்ளிக்கு விடுமுறை அளிப்பது குறித்து கேட்கப்பட்டது.. அதற்கு பதிலளித்த அவர் “ தமிழகத்தில் 1044 பேருக்கு இன்புளுயன்ஸா காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.. இவர்களில் 364 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.. எனவே காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதற்கான அவசியமில்லை.. அதே சமயம் வீட்டிலேயே காய்ச்சல் இருந்தால், அந்த குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்.. பள்ளிகளில் குழந்தைகளுக்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தால் அவர்களை ஆசிரியர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்ப வேண்டும்…” என்று தெரிவித்தார்..

எப்படி தற்காத்து கொள்வது..? ஏற்கெனவே காய்ச்சல் பாதித்த குழந்தை (அ) நபரின் மூச்சுக்காற்றில் கலந்திருக்கும் சளித்துளிகள் காற்றில் பரவி, அடுத்தவருக்கு காய்ச்சல் தொற்றுகிறது. நோயாளிகளின் எச்சில் (அ) சளியை தொட நேர்வதாலும் இது தொற்றலாம். சுத்தமாக கை கழுவுவது, முகக் கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது இதை தடுக்க உதவும். காய்ச்சல் வந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவும். மேலும் குழந்தைகளுக்கு அவசியம் ஃப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்..

RUPA

Next Post

’இனி படம் ரிலீஸ் ஆகி 3 நாளுக்கு அப்புறம் தான் ரிவியூ எழுதணும்’..! அதிரடி தீர்மானங்கள்..!

Mon Sep 19 , 2022
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் 2022ஆம் ஆண்டுக்கான பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டம் சங்கத் தலைவர் என்.ராமசாமி தலைமையில், துணைத்தலைவர்கள் கதிரேசன், ஆர்.கே.சுரேஷ், கௌரவ செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 20 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றம்..! அவைகளில் சில.. * 2009 – 2014 வரையிலான திரைப்பட விருதுகளை வழங்கியதற்கு நன்றி தெரிவித்து, மேலும் […]
Theater 1

You May Like