அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் ரஷ்யா-உக்ரைன் மோதலை முடிக்க ஒரு அமைதி ஒப்பந்தத்திற்கு சத்தமே இல்லாமல் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இரு நாடுகளுக்கும் இடையேயான போராட்டத்தை நிறுத்தும் ஒரு முன்னேற்றமாக அமையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த வாரம் ரஷ்யா-உக்ரைன் அமைதிக்கான 28 புள்ளிகளைக் கொண்ட திட்டத்தை ஒப்புக்கொண்டார் என்று உயர் தர நிர்வாக அதிகாரிகள் தெரிவித்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன..
நிர்வாகத்தின் உயர்தர அதிகாரிகள் கடந்த சில வாரங்களாக அமைதியாக (quietly) இந்தத் திட்டத்தை உருவாக்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது.. இதுதொடர்பாக ரஷ்ய தூதர் கீரில் ட்மிட்ரிவ் மற்றும் உக்ரைன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்துள்ளது என்றும் கூறப்படுகிறது..
அமெரிக்காவின் முன்மொழிவு டொனால்ட் ட்ரம்பின் 20 புள்ளிகளைக் கொண்ட காசா அமைதி திட்டத்திலிருந்து ஊக்கம் பெற்றது என்று கூறப்படுகிறது.. எனினும் அதிகாரி ஒருவர் அமைதி திட்டத்தின் விவரங்களை பகிர மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. முக்கிய தரப்பினர்களிடையே சரியான பேச்சுவார்த்தைக்கு உட்பட்டுள்ளது என்பதால் இது இன்னும் இறுதி வடிவத்தில் இல்லை. இந்த அமைதி ஒப்பந்த வடிவமைப்பு உக்ரைன் தலைவர்களுக்கு இன்னும் அதிகாரப்பூர்வமாக சமர்ப்பிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..
அமெரிக்கா உக்ரைனில்: இரு முக்கிய நோக்கங்கள்
இரு அமெரிக்க அதிகாரிகள், ஒரு ஐரோப்பிய அதிகாரி மற்றும் உக்ரைன் அரசாங்கத்திற்கு நெருங்கிய ஒரு மூலத்தின் தகவலின்படி, அமெரிக்கா பிரதிநிதிகள் புதன்கிழமை காலை உக்ரைனின் கீவ் நகரில் இறங்கினர். படைத்துறைத் தந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துதல், நிறுத்தப்பட்ட அமைதி செயல்முறையை மீண்டும் முன்முயற்சி செய்ய உதவுதல் ஆகியவை அமெரிக்காவின் நோக்கம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..
ரஷ்யா-உக்ரைன் போர்
பின்னணி:
ரஷ்யா 2022 பிப்ரவரியில் உக்ரைனில் நடத்திய அகிரிப்பு, கடந்த பல தசாப்தங்களில் ஐரோப்பாவின் மிகப்பெரிய போராக மாறியுள்ளது. கிழக்கு மற்றும் தெற்குப் பகுதி, இதில் கடுமையான மோதல்கள், ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் நீண்ட தூர தாக்குதல்கள் பரவலான நஷ்டம் மற்றும் மனிதநேய இழப்புகளை உருவாக்கி வருகின்றன.
உக்ரைன்: மேற்கத்திய படைத்துறை மற்றும் பொருளாதார ஆதரவுடன், தன் நிலப்பரப்பை காக்கும் மற்றும் ரஷ்ய முன்னேற்றங்களைத் தடுக்க முயற்சி செய்து வருகிறது.
ரஷ்யா: கைப்பற்றிய பகுதிகளில் கட்டுப்பாட்டை வலுப்படுத்தி, படைத்துறை மற்றும் பொது வசதிகளின் தாக்குதல்களால் உக்ரைனைக் கவனத்தில் வைக்க முயற்சி செய்து வருகிறது. இந்த மோதல் பரவலான இடம்பெயர்வு, ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் மற்றும் தீர்வு காணாத நிலை ஆகியவற்றை ஏற்படுத்தியுள்ளது.



