’சம்பளம் கேட்டா அடிப்பீங்களா’..? ’வணங்கான்’ திரைப்பட துணை நடிகை மீது தாக்குதல்..!!

சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கிய பாலா, இப்போது வணங்கான் என்ற படத்தை இயக்கி வருகிறார். முதலில் இந்த படத்தில் நடிகர் சூர்யா ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால், சில காரணங்களால், இப்படத்தில் இருந்து சூர்யா விலகினார். அதன்பின் இந்த படத்தை அருண் விஜய் மற்றும் ரோஷினி நடிப்பில் பாலா இயக்கி வருகிறார்.


இந்நிலையில், வணங்கான் படப்பிடிப்பு கன்னியாகுமரி சுற்றுவட்டார பகுதிகளில் நடந்து வருகிறது. இங்கு கேரள மாநிலத்தை சேர்ந்த துணை நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் சூட்டிங் 3 தினங்கள் நடந்த நிலையில், துணை நடிகர்-நடிகைகளுக்கு கூறியபடி சம்பளத்தை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து துணை நடிகைகளில் ஒருவரான லிண்டா, ஒருங்கிணைப்பாளர் ஜிதினிடம் கேட்டிருக்கிறார். அப்போது கோபமடைந்த அவர், லிண்டாவை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த லிண்டா, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

CHELLA

Next Post

ஏலம் விடப்படுகிறதா விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்…..? வெளியான அறிவிப்பால் பரபரப்பு……!

Wed Mar 22 , 2023
கடந்த 1998 ஆம் வருடம் திருமங்கலம் முதல் சாத்தூர் இடையே நடைபெற்ற சாலை பணிகளை சவரி முத்து என்ற ஒப்பந்ததாரர் மேற்கொண்டு வந்தார். 30 விழுக்காடு பணிகள் அவரால் முடிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென்று வேறு ஒரு நபருக்கு ஒப்பந்த மாற்றப்பட்டது. நீண்ட நிலை எது தனக்கான நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்று தெரிவித்து ஒப்பந்ததாரர் வழக்கு தொடர்ந்தார். 2 கோடியே 35 லட்சம் ரூபாய் தொகையை வழங்குமாறு கடந்த […]
court 1

You May Like