5 நாட்கள் பெண்கள் ஆடை அணியவே கூடாது.. இந்தியாவின் வினோத கிராமம்..! பின்னணி இதோ..

pini village 11zon

உலகம் வேகமாக நவீனமயமாகி வரும் நிலையில், சில கிராமங்கள் இன்னும் நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த வாழ்க்கை முறையையே தழுவி வருகின்றன. அறிவியல், தொழில்நுட்பம், மாறும் கலாச்சாரம் என அனைத்தையும் தாண்டி, பண்டைய மரபுகளையும் சில இடங்களில் மூடநம்பிக்கைகளையும் மக்கள் இன்றளவும் விடாமல் பின்பற்றி வருகின்றனர்.


இந்திய கிராமங்களில் மட்டுமல்ல, உலகின் பல நாடுகளிலும் இவ்வாறு விசித்திரமான பழக்கவழக்கங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. சில மரபுகள் நவீன உலகின் மதிப்பீடுகளுக்கு முரணாகவும், சில அதிர்ச்சியளிப்பதாகவும் தோன்றினாலும், அந்தந்த சமூகத்தில் அவை சாதாரண வாழ்க்கையின் ஓர் அங்கமாக கருதப்படுகின்றன.

இன்றைய காலத்தில் ஆண்–பெண் என அனைவரும் நவீன வடிவமைப்புகளுடன் கூடிய ஆடைகளை விரும்பி அணிகின்றனர். ஆனால், ஒரு கிராமம் கடந்த 90 ஆண்டுகளாகவே சட்டை, பேன்ட் உள்ளிட்ட எந்த ஆடையையும் அணியாமல் வாழ்ந்து வருகிறது என்றால், அது ஆச்சரியமல்லவா?

இந்த பழக்கம் இந்தியாவில் மட்டுமல்ல, ஐரோப்பாவிலும் உள்ளது. பிரிட்டனின் இங்கிலாந்து பகுதியில், ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் கடந்த 1929ஆம் ஆண்டு முதல் இதே மரபை பின்பற்றி வருகின்றனர். இங்கு தினசரி வாழ்க்கை மட்டுமல்ல, பண்டிகை மற்றும் கொண்டாட்டங்களின் போதும் மக்கள் தெருக்களில் ஆடையின்றி நடந்து செல்கின்றனர்.

இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் பாரம்பரிய முறையில் வேலை செய்து, இயற்கை உணவுகளை உண்டு, அமைதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். முன்னோர்கள் பின்பற்றிய நடைமுறைகளையே இன்றும் தவறாமல் தொடர்வதே இம்மக்களின் அடையாளமாக உள்ளது.

இதேபோல், இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலம், குலு மாவட்டத்தில் உள்ள பினி கிராமத்திலும் ஒரு விசித்திரமான மரபு நடைமுறையில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஷ்ரவண மாதத்தில், இந்த கிராமத்தைச் சேர்ந்த அனைத்து பெண்களும் ஐந்து நாட்களுக்கு ஆடை அணியாமல் இருக்க வேண்டிய ஒரு சடங்கை பின்பற்றுகின்றனர்.

இந்த காலகட்டத்தில் பெண்கள் முழுமையாக தங்கள் வீடுகளுக்குள் தங்கியிருப்பார்கள். வெளியில் செல்வதற்கு அனுமதி இல்லை. இந்த பழக்கம் வெளிநாட்டினரையும், பிற மாநில மக்களையும் சிந்திக்க வைக்கும் வகையில் இருந்தாலும், பினி கிராம மக்களுக்கு இது தலைமுறைகளாக தொடரும் ஒரு சாதாரண மரபாகவே கருதப்படுகிறது.

Read more: தண்ணீர் குடித்த உடனே சிறுநீர் கழிக்கிறீர்களா..? அசால்டா விடாதீங்க.. உடனே செக் பண்ணுங்க!

English Summary

Women should not wear clothes for 5 days.. India’s strange village..!

Next Post

புதுச்சேரி அரசில் 484 காலிப்பணியிடங்கள்.. 10, 12, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!! செம சான்ஸ்..

Mon Dec 1 , 2025
Puducherry Government has 484 vacancies.. 10th, 12th degree graduates can apply..!
job

You May Like