சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் கொளஞ்சி (45) இவர் வேளச்சேரி மேம்பாலத்தின் கீழே தங்கி இருந்து கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்தார். அதை மேம்பாலத்தின் கீழ் தென்காசியில் சேர்ந்த அவிநாசி (22 )என்ற நபரும் தங்கி இருந்து கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் கொளஞ்சியும், அவிநாஷும் நேற்று முன்தினம் இரவு தரமணி இணைப்பு சாலையில் நின்று உரையாடிக் கொண்டிருந்தனர் அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய் தகராறு முற்றியதால், அவினாஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கொளஞ்சியை குத்தி உள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த கொளஞ்சி சம்பவ இடத்திலேயே சற்று நேரத்தில் உயிர் இழந்தார்.
இது தொடர்பாக பொதுமக்கள் வேளச்சேரி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் காவல்துறையினர் விரைந்து வந்து கொளஞ்சியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர். அதோடு ஓரினச்சேர்க்கை விவகாரம் குறித்து இந்த கொலை நடைபெற்று இருப்பதாக சொல்லப்படுகிறது.