சாலை ஓரத்தில் பேசிக் கொண்டிருந்த இருவர் திடீரென்று கத்தியை எடுத்த நபர்…..! மறு நிமிடம் ரத்த வெள்ளத்தில் சரிந்த கட்டிட தொழிலாளி…..!

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் கொளஞ்சி (45) இவர் வேளச்சேரி மேம்பாலத்தின் கீழே தங்கி இருந்து கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்தார். அதை மேம்பாலத்தின் கீழ் தென்காசியில் சேர்ந்த அவிநாசி (22 )என்ற நபரும் தங்கி இருந்து கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்ததாக தெரிகிறது.


இந்த நிலையில் கொளஞ்சியும், அவிநாஷும் நேற்று முன்தினம் இரவு தரமணி இணைப்பு சாலையில் நின்று உரையாடிக் கொண்டிருந்தனர் அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய் தகராறு முற்றியதால், அவினாஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கொளஞ்சியை குத்தி உள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த கொளஞ்சி சம்பவ இடத்திலேயே சற்று நேரத்தில் உயிர் இழந்தார்.

இது தொடர்பாக பொதுமக்கள் வேளச்சேரி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் காவல்துறையினர் விரைந்து வந்து கொளஞ்சியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர். அதோடு ஓரினச்சேர்க்கை விவகாரம் குறித்து இந்த கொலை நடைபெற்று இருப்பதாக சொல்லப்படுகிறது.

Next Post

நள்ளிரவில் உறங்கிக்கொண்டிருந்த நபரை கத்தியை காட்டி மிரட்டிய கொள்ளை கும்பலுக்கு…..! காலையில் காத்திருந்த அதிர்ச்சி…..!

Wed Jun 28 , 2023
சென்னை அயனாவரம் பங்காரு தெருவை சேர்ந்தவர் மாரீஸ்வரன்(30) இவர் நேற்று முன்தினம் அதிகாலை 1 மணி அளவில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது ஆட்டோவில் வந்த ஐந்து பேர் மாரீஸ்வரன் வீட்டுக்குள் நுழைந்து மாரீஸ்வரனை கத்தியை காட்டி மிரட்டி இருக்கின்றனர். அதன் பிறகு அவரையும், அவரது நண்பர்களையும் சரமாரியாக தாக்கி விட்டு அவர்களிடம் இருந்த பணம் மற்றும் 7 செல்போன்களை பறித்துக் கொண்டு ஆட்டோவில் தப்பிச் சென்றனர். இது தொடர்பான […]
arrest

You May Like