துணிக்கடையில் ஆடைகளை திருடிவிட்டு வந்த மனைவியை கணவர் வசமாக சிக்க வைத்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தம்பதிகள் இருவர் துணிக்கடைக்கு சென்ற நிலையில், அங்கு ஆடையை திருடுவதற்கு முடிவு செய்து பிளான் போட்டுள்ளனர். அதன்படி, காருக்குள் கணவர் ரெடியாக இருக்க, மனைவி ஆடைகளை திருடி ஓடிவந்துள்ளார். ஆனால், காரின் கதவை திறக்காமல், கணவர் காருக்குள் ஹாயாக உட்கார்ந்துக் கொண்டிருக்கிறார். மனைவி காரின் கதவை திறக்க முடியாமல் சிரமப்படுகிறார்.
இந்நிலையில், திடீரென காரை எடுத்துக் கொண்டு கணவர் வேகத்தில் கிளம்பிச் சென்றார். இதை சற்றும் எதிர்பாராத மனைவி அதிர்ச்சியில், திருடி வந்த துணிகளை அங்கேயே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார். இதை கவனித்த செக்யூரிட்டி, அந்த பெண்ணை விரட்டிப் பிடித்துக் கொண்டு வருகிறார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிக பார்வையாளர்களை பெற்று வருகிறது.