fbpx

இங்கிலாந்தில், இந்து முஸ்லிமிடையே வன்முறை வெடிப்பு… இந்து கோவிலில் இருந்த காவி கொடியை கிழித்து அட்டுழியம்… வீடியோ வெளியானது..!!

இந்தியா,பாகிஸ்தான் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பின்னர், இந்து, முஸ்லீம் இடையே வகுப்புவாதம் வன்முறையாக வெடிதது. இங்கிலாந்தின் லீசெஸ்டர்ஷையரில் ஞாயிற்றுக்கிழமை இரு பிரிவினர் இடையே வன்முறை வெடித்தது. கடந்த மாதம் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வென்றது.

இந்தியா, பாகிஸ்தான் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை அடுத்து ரசிகர்களிடையே மோதல் உண்டானது. இதனிடையே, லீசெஸ்டர்ஷையரில் இருக்கும் ஒரு இந்து கோவிலுக்கு வெளியே காவி கொடி கிழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கருப்பு உடை அணிந்த ஒருவர், இந்து கோவில் கட்டிடத்தின் மீது ஏறி காவி கொடியை கீழே இறக்கியுள்ளார்.

இதை பார்த்து கீழே நின்ற சிலர் ஆரவாரமிட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியானதை தொடந்து, லீசெஸ்டர்ஷைர் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஆசிய கிரிக்கெட் போட்டிக்குப் பின்னர், அந்த பகுதியில் இந்து மற்றும் முஸ்லீம்களுக்கிடையே இடையே வகுப்புவாத பதற்றம் வன்முறையாக வெடித்துள்ளது. இதுவரை, 15 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Baskar

Next Post

மிஸ் பண்ணிடாதீங்க.. இந்திய அஞ்சல்துறையில் 98000 காலி பணியிடங்கள்... 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்..

Mon Sep 19 , 2022
தபால்காரர், அஞ்சல் காவலர்கள் மற்றும் பிற பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று இந்திய அஞ்சல்துறை அறிவித்துள்ளது.. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்தியா போஸ்ட் இணையதளமான indiapost.gov.in இலிருந்து ஆட்சேர்ப்பு அறிவிப்பைப் பதிவிறக்கம் செய்யலாம். இந்த ஆட்சேர்பு மூலம் மொத்தம் 98,083 பணியிடங்கள் நிரப்பப்படும். நாடு முழுவதும் உள்ள 23 வட்டங்களில் காலி பணியிடங்களை திறக்க அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா போஸ்ட் ஆட்சேர்ப்பு 2022: காலியிட விவரங்கள் தபால்காரர்: 59099 […]

You May Like