fbpx

தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் கொடூரச் செயல் … 27 பேரை கட்டி வைத்து கொலை?

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடத்து வரும் நிலையில் 27 பேரை கட்டி வைத்து சுட்டுக் கொன்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற்றப்பட்டதை அடுத்து கடந்த ஆண்டு தலிபான் அமைப்பு ஆப்கனில் ஆட்சியைக் கைப்பற்றியது அறிந்த ஒன்று . ஆனால் தலிபானுக்கு எதிராக ஆப்கனில் சில கிளர்ச்சபடைகள் செயல்பட்டு வருகின்றது.

இந்த கிளர்ச்சி படைகளை ஒடுக்குவதில் தலிபான்கள் தீவிரம் காட்டுகின்றனர். அந்த வகையில் பஞ்ச்ஷீர் மாகாணத்தில் கடந்த மாதம் நடந்த சண்டையில் 40 கிளர்ச்சியாளர்களை கொன்றதாகவும் , நூற்றுக்கும் மேற்பட்டவர்களை சிறை பிடித்தார்கள் என தலிபான் தெரிவித்திருந்தது.

இதனிடையே கைதிகள் 27 பேரை கை , கால்களை கட்டி வைத்து கொடூர முறையில் தலீபான்கள் சுட்டுக் கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இங்கிலாந்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் விசாரணை அமைப்பு ஒன்று இது குறித்து அதிர்ச்சிகரமான வீடியோ ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. ஆனால் இது பற்றி தலீபான் எந்த பதிலும் அளிக்கவில்லை.

Next Post

Prank Video..!!! பிரபல யூடியூப் சேனல்களுக்கு 'செக்' வைத்த சைபர் கிரைம்..!! விசாரணைக்கு ஆஜராக உத்தரவு..!!

Wed Oct 19 , 2022
பிராங்க் வீடியோக்களை வெளியிடும் யூடியூப் சேனலின் உரிமையாளர்கள் வரும் 20ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். சென்னையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், பெண்களை துன்புறுத்தும் வகையிலும் பிராங்க் வீடியோக்களை (Prank Video) எடுத்து சிலர் யூடியூப் சேனல்களில் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக கட்டெரும்பு, குல்பி, ஆரஞ்சு மிட்டாய், ஜெய்மணிவேல், நாகை 360 ஆகிய யூடியூப் சேனல்களை முடக்க வேண்டும் எனவும் […]
Prank Video..!!! பிரபல யூடியூப் சேனல்களுக்கு செக் வைத்த சைபர் கிரைம்..!! விசாரணைக்கு ஆஜராக உத்தரவு..!!

You May Like