ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடத்து வரும் நிலையில் 27 பேரை கட்டி வைத்து சுட்டுக் கொன்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற்றப்பட்டதை அடுத்து கடந்த ஆண்டு தலிபான் அமைப்பு ஆப்கனில் ஆட்சியைக் கைப்பற்றியது அறிந்த ஒன்று . ஆனால் தலிபானுக்கு எதிராக ஆப்கனில் சில கிளர்ச்சபடைகள் செயல்பட்டு வருகின்றது.
இந்த கிளர்ச்சி படைகளை ஒடுக்குவதில் தலிபான்கள் தீவிரம் காட்டுகின்றனர். அந்த வகையில் பஞ்ச்ஷீர் மாகாணத்தில் கடந்த மாதம் நடந்த சண்டையில் 40 கிளர்ச்சியாளர்களை கொன்றதாகவும் , நூற்றுக்கும் மேற்பட்டவர்களை சிறை பிடித்தார்கள் என தலிபான் தெரிவித்திருந்தது.
இதனிடையே கைதிகள் 27 பேரை கை , கால்களை கட்டி வைத்து கொடூர முறையில் தலீபான்கள் சுட்டுக் கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இங்கிலாந்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் விசாரணை அமைப்பு ஒன்று இது குறித்து அதிர்ச்சிகரமான வீடியோ ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. ஆனால் இது பற்றி தலீபான் எந்த பதிலும் அளிக்கவில்லை.