சில சமயங்களில் குழந்தைகள் கண் சிமிட்டும் நேரத்தில் சில வேலைகளை செய்து விடுவது உண்டு. தற்போது அதுபோன்ற ஒரு சம்பவம்தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் குழந்தைகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
வீட்டில் குழந்தைகள் இருந்தால், நாம் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்களை எப்போதும் கண்காணிப்பது மிக அவசியமாகும். பச்சிளம் குழந்தைகள் கையில் கிடைக்கும் அனைத்து பொருட்களையும் வாயில் போட்டுக்கொள்ளும் பழக்கம் உடையவர்கள். குழந்தைகளை 24×7 பெற்றோர் தங்கள் கண்காணிப்பிலேயே வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். குழந்தைகள் தங்களது குறும்புத்தனத்தால், தங்களுக்கோ அல்லது பிறருக்கோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்ற கவலை எப்போதும் பெற்றோருக்கு இருக்கும். எனினும், குழந்தைகள் எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாக இருக்கும் சூழ்நிலையையும் நாம் வீட்டில் உருவாக்க வேண்டும்.
சில சமயங்களில் குழந்தைகள் கண் சிமிட்டும் நேரத்தில் சில வேலைகளை செய்து விடுவது உண்டு. தற்போது அதுபோன்ற ஒரு சம்பவம்தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தோட்டம் போல் காட்சியளிக்கும் ஒரு இடத்தில், ஒரு சிறுவன் அமர்ந்திருப்பதை வீடியோவில் காண முடிகிறது. அவர் கையில் இருப்பது ஒரு பீர் கேன் போல் தோன்றுகிறது. அந்த பீர் கேனை திறக்கும் சிறுவன் அந்த மது பானத்தை குடிக்கத் தொடங்குகிறார். பின்னர் சிறிது நிறுத்தி, யாராவது தன்னை பார்க்கிறார்களா? என பார்க்கிறார். பின்னர் மீண்டும் அவர் அதை குடிக்கிறார்.
இந்த சிறுவனும் அவரது பெற்றோரும் அதிர்ஷ்டசாலிகள் என்றுதான் கூற வேண்டும். ஏனெனில், குழந்தைகள் இப்படி பீர் குடிப்பது பல நாட்டு சட்டங்களின் படி குற்றமாகும். ஆகையால், குழந்தைகளின் கண் பார்வைக்கு எட்டாதவாறு, அவர்கள் அடிக்கடி செல்லாத இடத்தில் இப்படிப்பட்ட பொருட்களை வைக்க வேண்டும். நீங்கள் நேரடியாகவோ அல்லது வேறுவிதமாகவோ குழந்தைகளின் பொறுப்பில் இருந்தால், மிக மிக கவனமாக இருக்க வேண்டும். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவுக்கு இணையவாசிகள் கமெண்டுகளை குவித்து வருகின்றனர்.