இன்றைய நவீன காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போனுக்கு அடிமையாகி வருகிறோம். நம் அன்றாட வாழ்க்கைக்கு உணவு, உடை, இருப்பிடம் எப்படி முக்கியமோ அதே போல இன்று மொபைல்களும் முக்கியமாக மாறிவிட்டது. என்னத்தான் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் கூட நாம் செல்போனில் தான் குட் மார்னிங் மெசேஜ் அனுப்பும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
சாப்பிடும் போது கையில் செல்போன், தூங்கும் போது பக்கத்தில் செல்போன், இவ்வளவு ஏன் பாத்ரூம் செல்லும் போது கூட கையில் செல்போன் எடுத்து தான் போகிறோம். ஆனால் தூங்கும் போது நம்மில் பலரும் செல்போனை தலையணைக்கு கீழ் வைக்கிறோம். இது உண்மையில் எவ்வளவு ஆபத்து என்று உங்களுக்கு தெரியுமா? அந்த வரிசையில் இரவு தூங்கும் போது தலையணைக்கு கீழ் செல்போன் வைப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
செல்போனால் ஏற்படும் ஆரோக்கிய கோளாறுகள் பற்றி பலரும் கூற கேட்டிருக்கிறோம். ஆனால் அது மகாஅசுரனாக நாளுக்குநாள் வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது. நம்மில் பலரும் காலை எழுந்தவுடன் முதலில் எடுப்பது செல்போனைத்தான். நம் கைக்கு எட்டும் தூரத்திலியே செல்போன் இருக்கவேண்டும் என்ற எண்ணம் நமக்குள் வளர்ந்து விட்டது. செல்போனை படுக்கைக்கு அருகில் வைத்துக்கொண்டே தூங்குவதால் ஏற்படும் மோசமான விளைவுகள் என்ன என்பதை இங்கு பார்க்கலாம்.
மனிதர்கள் அனைவரும் கங்காரு தன் குட்டியை சுமப்பது போல தங்கள் போனை சுமந்துகொண்டுதான் அனைத்து இடங்களுக்கும் செல்கின்றனர். குறிப்பாக ஆண்கள் தங்கள் பேண்ட் பாக்கெட்களிலும், பெண்கள் மார்புக்கு அருகிலும் செல்போனை வைக்கின்றனர். இது மிகவும் ஆபத்தான ஒரு பழக்கமாகும். செல்போனால் ஏற்படும் கதிரியக்கங்கள் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த இடங்களில் செல்போனை வைப்பது ஆண்களுக்கு ஆண்மைக்குறைவும், பெண்களுக்கு மார்பக புற்றுநோயும் ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
வெப்பத்தை உருவாக்கக்கூடிய பின்னணி செயல்முறைகளை குறைக்க சார்ஜ் செய்வதற்கு முன்பு தேவையற்ற பயன்பாடுகளை மூடிவிடவும். பழைய அல்லது பழுதடைந்த பேட்டரி சார்ஜ் செய்யும்பொழுது அதிக வெப்பமடையக் கூடும். எனவே, பேட்டரி நிலையை அடிக்கடி கண்காணிக்கவும்.
முக்கியமாக, செல்போனுடன் கொடுக்கப்பட்ட சார்ஜரை அல்லது அதற்கு சமமான சான்றளிக்கப்பட்ட சார்ஜரையே எப்பொழுதும் பயன்படுத்துவது பாதுகாப்பானதாகும். சிறந்த காற்றோட்டம் மற்றும் வெப்பச் சிதறலை அனுமதிக்க சார்ஜ் செய்யும்பொழுது தொலைபேசியின் பாதுகாப்பு உறையை அகற்றுவது நல்லது. அத்துடன் அலைபேசியை பயன்படுத்தும்போது சார்ஜ் செய்வதை தவிர்க்கவும். செல்போனின் ஆயுளை நீடிக்க முழுவதும் சார்ஜ் செய்யாமல் (100%) 80 முதல் 90% சார்ஜ் செய்வது நல்லது.
செல்போனை தலையணைக்கு அருகிலோ, படுக்கையில் வைத்தோ சார்ஜ் செய்வதைத் தவிர்ப்பது அதிக வெப்பத்தால் ஏற்படும் தீ விபத்தை தவிர்க்க உதவும். போன் சார்ஜ் செய்யும்பொழுது காற்றோட்டத்தை அதிகரிக்க செல்போனை படுக்கை அல்லது சோபா போன்ற மென்மையான மேற்பரப்பில் வைக்காமல் மேஜை, நாற்காலி போன்ற தட்டையான மேற்பரப்பில் வைத்து சார்ஜ் செய்வது நல்லது.
தூங்குவதற்கு முன்பு தொலைபேசியை பயன்படுத்தினால் கண் அழுத்தத்தைக் குறைக்க நீல ஒளி வடிகட்டிகளை இயக்குவது சிறந்தது. அழைப்புகள் அல்லது செய்திகளிலிருந்து வரும் குறுக்கீடுகளைத் தவிர்ப்பதற்கு சைலன்ட் மோடில் போடுவதும் சிறந்ததுதான். நல்ல தூக்கத்தைப் பெற படுக்கைக்கு செல்வதற்கு ஒரு மணி நேரம் முன்பாவது செல்போனை பயன்படுத்துவதை நிறுத்துவது நிம்மதியான தூக்கத்திற்கு வழி வகுக்கும்.
Readmore: டீயில் ரஸ்க் தொட்டு சாப்பிடுகிறீர்களா?. காமினேஷனே ரொம்ப ஆபத்து! இந்த தவறை செய்யவே கூடாது!.