உடலுக்குத் தேவையான சத்துக்கள் மற்றும் பிற கனிம சத்துக்களையும் அளிப்பதில் பழங்கள் தான் அதிக அளவில் உதவுகிறது. ஆனால் இதனை தவறான முறையில் உட்கொள்வதால்சில பக்கவிளைவிற்கு உள்ளாகின்றனர்.
பழங்களை எப்போதும் மற்ற உணவுப் பொருட்களுடன் சேர்த்து உண்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் பழங்களை கடினமான சில உணவு பொருட்களுடன் சேர்த்து எடுக்கும் போது, அது விரைவில் செரிமானம் ஆகாமல் வயிற்றிலேயே நீண்ட நேரம் இருந்து விடுகிறது. மேலும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலையும் கடினமாக்குகிறது.
பழங்களை தூங்கும் முன்பு இரவு சாப்பிட கூடாது. ஏனெனில் இவ்வாறு உறக்கத்திற்கு முன்பு எடுத்து கொண்டால் அது தூக்கத்திற்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் அமைந்து விடுகிறது. மேலும் அசிடிட்டியை உண்டாக்கும் அபாயம் உள்ளது.
ஆப்பிளை பலரும் விரும்பி உண்ண கூடிய பழமாக இருக்கிறது. இருந்த போதிலும் அதன் தோலை நீக்கிவிட்டு பலரும் சாப்பிடுகிறார்கள். இது முற்றிலும் தவறான ஒன்று. தோலுடன் உண்ணகூடிய பழங்களை தோலுடன் தான் உண்ண வேண்டும். தோலுடன் சாப்பிடும் போது உடல் பருமன், புற்றுநோய் போன்றவற்றின் அபாயம் குறைகிறது.