தீபாவளி சலுகையாக ஒரு டிக்கெட்டை வைத்து 5 முறை இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிப்பு வெளியிட்டதால்மக்கள் குஷியாக உள்ளனர்.
தீபாவளியை ஒட்டி பல்வேறு நிறுவனங்கள் பல சலுகைகளை வழங்கி வருகின்றன. ஆன்லைன் இ.காமர்ஸ் நிறுவனங்கள் கூட இது மாதிரியான சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றது. இந்நிலையில் மும்பை மாநகரத்தில் ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஒரு டிக்கெட்டை வைத்து 5 முறை பயணம் செய்யலாம் என்ற அந்த அறிவிப்புதான் அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. டிஜிட்டல் பயணச்சீட்டுகளை பயன்பாட்டிற்கு கொண்டுவருவதை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் உள்ள பேருந்துகளில் அடுத்த தீபாவளி வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை 5 நாட்களும் இந்த பயணச்சீட்டை பயன்படுத்திக்கொள்ளலாம் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. ஒரு டிக்கெட்டின் விலை 9 ரூ. என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 7 நாட்கள் எந்த வழித்தடத்தில் வேண்டுமானாலும் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை விலை அனைத்து விதமான பேருந்துகளிலும் பொருந்தும் எனவும் குளிர்சாதன பேருந்துகளில் கூட பொருந்தும்எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.