“ஃப்ரெண்ட் தானே”! நம்பி சென்ற டாக்டர் மகள்! குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து கூட்டு பலாத்காரம்!

நாடெங்கிலும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு மருத்துவர் ஒருவரின் மகள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கி இருக்கிறது. உத்திர பிரதேச மாநிலம் கான்பூரில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. உத்திர பிரதேசம் மாநிலம் கான்பூரைச் சார்ந்த மருத்துவர் ஒருவரின் மகள் தன் நண்பர்களாலேயே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. உத்திர பிரதேசம் மாநிலம் பார்ரா மாவட்டத்தைச் சார்ந்த மருத்துவர் ஒருவருடைய மகளுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாக இருக்கிறார் வினய் என்ற இளைஞர்.


இருவரும் நன்றாக நட்புடன் பழகி இருக்கின்றனர். இந்நிலையில் அந்தப் பெண்ணை ஹூக்கா பார்லருக்கு வருமாறு அழைத்திருக்கிறார் வினய். இதனைத் தொடர்ந்து நண்பர் தானே என இந்தப் பெண்ணும் சென்று இருக்கிறார். அங்கு குளிர்பானத்தில் போதை மருந்துகளை கலந்து இந்தப் பெண்ணுக்கு குடிக்க கொடுத்திருக்கிறார். போதை மருந்து கலந்த குளிர்பானத்தை குடித்த பெண் சுயநினைவை இழந்துள்ளார். மயக்கமடைந்த பெண்ணை வெறிச்சோடி ஒரு பகுதிக்கு கடத்திச் சென்று அங்கு வைத்து தனது நண்பர்களுடன் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இது தொடர்பாக அந்தப் பெண்ணின் தந்தை காவல்துறையில் புகார் செய்திருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

"அவ நடத்தையில் சந்தேகம் அதான்....."! மனைவியை துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் தொட்டிக்குள் மறைத்து வைத்த சைக்கோ கணவன்!

Mon Mar 6 , 2023
சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் கணவன் தனது மனைவியை கொலை செய்து அவரது உடலை துண்டு துண்டாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தைச் சார்ந்தவர் பவன். இவர் திருட்டு வழக்குகளில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு தனது மனைவியின் மீது தீராத சந்தேகம் இருந்திருக்கிறது. இதன் காரணமாக அவரை கொலை செய்த முடிவு எடுத்திருக்கிறார் பவன். இதற்காக திட்டம் தீட்டிய பவன் தனது இரண்டு […]
IMG 20230306 WA0067

You May Like