சென்னையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர்; போலீசார் விசாரணை..!

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர், போன் செய்து பல இடங்களில் வெடிகுண்டு வெடிக்க இருப்பதாக மிரட்டல் விடுத்தார். அந்த மர்மநபர் பேசிய செல்போன் எண்ணை வைத்து, காவல்துறையினர் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.


இதனைத் தொடர்ந்து மீஞ்சூர் அருகே மிரட்டல் விடுத்தவரின் செல்போன் சிக்னல் காட்டியது. இதனையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர், ரயில் நிலையத்தில் இருந்த மிரட்டல் விடுத்த நபரை கைது செய்தனர்.

இதுகுறித்து அந்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் அனுப்பம்பட்டு பகுதியை சேர்ந்த பட்டதாரி இளைஞரான லோகேஷ் என்கிற விக்னேஷ் என தெரியவந்தது. அதன் பின்னர் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

இன்ஸ்டாகிராம் காதலால் குழந்தை பெற்றெடுத்த பிளஸ்1 மாணவி..!! ஆசைவார்த்தைக் கூறி அடிக்கடி உல்லாசம்..!!

Fri Sep 30 , 2022
11-ம் வகுப்பு மாணவி குழந்தை பெற்ற சம்பவத்தில், அதற்கு காரணமான திண்டுக்கல்லை சேர்ந்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்1 படித்து வருகிறார். கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகளை கவனிப்பதற்காக அவரது பெற்றோர் மாணவிக்கு செல்போன் வாங்கி கொடுத்துள்ளனர். ஆனால், சிறுமி இன்ஸ்டாகிராம் மற்றும் ஆன்லைனில் கேம் விளையாடுவதற்கும் செல்போனை […]
’சிறுமியின் உள்ளாடையை கழற்ற சொல்வதும் கற்பழிப்புக்கு சமம் தான்’..!! உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

You May Like