“புதிய இந்தியாவின், புதிய ரயில்”! சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் உணவு சேவையை பாராட்டி பதிவிட்ட இளைஞர் ரயில்வே மந்திரியின் பதில் ட்வீட்!

இந்தியாவின் முக்கிய நகரங்கள் இடையே பயணிக்கும் அதிவேக ரயிலான சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த நபர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வழங்கப்பட்ட உணவுகளை புகைப்படம் எடுத்து பகிர்ந்திருக்கிறார். அதற்கு ரயில்வே மந்திரியும் பதில் அளித்துள்ளார். இந்தப் பதிவை இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ட்விட்டர் பயனாளி ஒருவர் சமீபத்தில் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்திருக்கிறார் அந்தப் பயணத்தின் போது அவருக்கு வழங்கப்பட்ட உணவுகளை அவர் புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இது தொடர்பாக ரயில்வே துறைக்கு நன்றியும் தெரிவித்து இருக்கிறார். இந்த பதிவிற்கு ரயில்வே அமைச்சரின் பதிலும் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது .


இது தொடர்பாக பதிவிட்டுள்ள நபர் உணவின் புகைப்படத்தை பகிர்ந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்கிறேன். கடந்த 9 வருடங்களில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. ரயில்வே துறை நன்றாக முன்னேறி உள்ளது. உணவின் தரமும் மேம்பட்டுள்ளது என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார் . இவரது இந்த பதிவிற்கு பதிலளித்து இருக்கும் ரயில்வே யூனியன் மந்திரி தர்ஷனா ஜர்தோஸ் ” எங்களது உணவு சேவை உங்களுக்கு பிடித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி இதுதான் புதிய இந்தியாவின், புதிய ரயில்” என பதிலளித்துள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

1newsnationuser5

Next Post

கேப்டன்சி ப்ளான்!... இந்த மனுசன் எங்கிருந்து தான் யோசிப்பாரோ?!... தோனியுடனான அனுபவத்தை பகிர்ந்த சிஎஸ்கே வீரர்!

Tue Apr 11 , 2023
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவுக்கு எதிராக ஆடும் போது தோனி தனக்கு எதிராக மேற்கொண்ட கள வியூக உத்திகள் தன்னை எரிச்சலடையச் செய்யும் என்று சிஎஸ்கேவின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கூறியுள்ளார். தோனியுடனான அனுபவம் குறித்து உத்தப்பா ஜியோ சினிமாவுக்கு அளித்த பேட்டியில், நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஆடும்போது மிகவும் எரிச்சலடைந்துள்ளேன். தோனி மீது எரிச்சலாகவே இருக்கும். ஹேசில்வுட் வீசும் போது ஃபைன்லெக் திசையில் யாரையும் […]
Uthappa 1

You May Like