இந்தியாவில் 3 பேரில் ஒருவர் பீர் குடிப்பது சிறுநீரக கற்களை குணப்படுத்தும் என்று நம்புகிறார்.. ஆனால் உண்மை என்ன..?

நம் உடலில் மிகவும் முக்கியமான உறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரகத்தில் ஏதேனும் பிரச்சனை என்றால், அது மென்மேலும் அதிகரித்து உடலின் அடுத்தடுத்த உறுப்புகளையும் பாதிக்கக் கூடும்… சிறுநீரகப் பிரச்சனைகளில் முக்கியமானதாக இருப்பது சீறுநீரகத்தில் கல். சிறுநீரகங்களில் கல் உருவானால், சிறுநீர் ஓட்டத்தை தடுப்பதுடன், சிறுநீரகம் வீக்கத்தை ஏற்படுத்தும். சமீபகாலமாக சிறுநீரக கற்களின் பாதிப்பு அதிகரித்து வருகின்றன, மேலும் சிறுநீரக செயல்பாடு மற்றும் சிறுநீரக நோய்களுடன் தொடர்புடைய அபாயங்கள் பற்றிய போதிய புரிதல் இதற்கு காரணம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்..

shutterstock 706192516 scaled 1

இந்தியாவில் 3 பேரில் ஒருவர் பீர் குடிப்பது சிறுநீரக கற்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது என்று நம்புகிறார்கள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது… சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் தங்கள் சிகிச்சையை ஆறு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை தாமதப்படுத்தத் தயாராக உள்ளனர்.. பீர் குடித்தால் சிறுநீரக கற்கள் கரைய உதவும் என்பது பலரின் நம்பிக்கையாக உள்ளது.. எனினும் பீர் குடிப்பதால் சிறுநீரக கற்களை குணப்படுத்த முடியும் என்பதை உறுதிப்படுத்தும் அறிவியல் தரவு எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

பீர், அதிக சிறுநீரை வெளியேற்ற உதவுகிறது மற்றும் சிறிய கற்களை வெளியேற்ற உதவுகிறது. ஆனால் 5 மிமீக்கு மேல் உள்ள கற்களை உடலில் இருந்து வெளியேற்ற முடியாது, ஏனெனில் வெளியேறும் பாதை சுமார் 3 மிமீ மட்டுமே உள்ளது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.. மேலும் சிறுநீரகத்தில் பிரச்சனை இருக்கும் போது பீர் குடிப்பது நிலைமையை மோசமாக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்..

“ சிறுநீரக கற்கள் உங்கள் சிறுநீர் பாதையின் எந்தப் பகுதியையும் பாதிக்கலாம்.. உங்கள் சிறுநீரகத்திலிருந்து உங்கள் சிறுநீர்ப்பை வரை. பெரும்பாலும், சிறுநீர் செறிவூட்டப்படும்போது கற்கள் உருவாகின்றன, தாதுக்கள் படிகமாகி ஒன்றாக ஒட்டிக்கொள்ள அனுமதிக்கிறது. பெரும்பாலான சிறிய சிறுநீரக கற்களுக்கு சிகிச்சை தேவையில்லை, மேலும் தண்ணீர் நிறைய குடிப்பதால், அவை வெளியேறலாம்.. ஒரு நாளைக்கு குறைந்தது 3-4 லிட்டர் தண்ணீரைக் குடிப்பது உங்கள் சிறுநீரை நீர்த்துப்போகச் செய்து, கற்கள் உருவாவதைத் தடுக்க உதவும்..” என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

1newsnationuser1

Next Post

இன்று கோவை வருகிறார் தமிழக முதல்வர்…..! பாதுகாப்பு வளையத்திற்குள் கோவை மாநகரம்…….!

Sat Mar 11 , 2023
கோயம்புத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டியில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 1000 யூனிட் இலவசமாக மின்சாரம் வழங்குவதற்கு ஆணையிட்ட முதலமைச்சருக்கு கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்ட விசைத்தறி தொழிலாளர்கள் நன்றி தெரிவிக்கும் கூட்டம் கோவையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கோவை மாநகருக்கு வருகை தருகிறார். இதனை முன்னிட்டு, தமிழக காவல்துறையினர் கோவையில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். முதலமைச்சர் பயணிக்கும் சாலை மற்றும் நன்றி […]
mk stalin

You May Like