இன்று காலை 10 மணி வேலைவாய்ப்பு முகாம்…! யார் யாரெல்லாம் இதில் பங்கேற்கலாம்…? முழு விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ, டிரைவா் மற்றும் கணிணி பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரா்கள் கலந்து கொள்ளலாம்.

மேற்குறிப்பிட்ட தகுதியுள்ள தனியாா் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவா்கள் தங்களது சுயவிவரம் மற்றும் கல்வி சான்றுகளுடன் முகாமில் பங்கேற்கலாம். மேலும் தனியாா்துறை நிறுவனங்களில் பணிநியமனம் பெறும் நபர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது என தெரிவித்துள்ளாா்.

Vignesh

Next Post

#Weather Report: தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்களுக்கு...! வானிலை மையம் மிக முக்கிய அறிவிப்பு...!

Fri Feb 10 , 2023
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட செய்தி‌ குறிப்பில்; இன்று முதல் 13-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும்’ என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச […]
இன்று முதல் 3 நாட்களுக்கு..!! எங்கெங்கு மழை பெய்யும்..!! வானிலை மையம் புதிய தகவல்..!!

You May Like