தர நிலைகளுக்கு ஏற்ப உரம் உற்பத்தி நிறுவனங்களுக்கு 100% மானியம்…! மத்திய அரசு தகவல்…!

farmers 2025

பிஓஎஸ் கருவிகள் மூலம் ஆதார் அடிப்படையில் பயனாளிகளுக்கு விற்கப்படும் உண்மையான விற்பனை அளவின்மீது பல்வேறு உரங்களின் தர நிலைகளுக்கு ஏற்ப 100% மானியம் உர நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றது.


உரங்களுக்கு டிபிடி” திட்டத்தின்கீழ், ஒவ்வொரு சில்லறை விற்பனை நிலையங்களிலும் பயன்படுத்தப்படும் பிஓஎஸ் கருவிகள் மூலம் ஆதார் அடிப்படையில் பயனாளிகளுக்கு விற்கப்படும் உண்மையான் விற்பனை அளவின்மீது பல்வேறு உரங்களின் தர நிலைகளுக்கு ஏற்ப 100% மானியம் உர நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றது. மறுப்பேதும் தெரிவிக்காமல் அனைத்து விவசாயிகளுக்கும் (சிறு, நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகள் உட்பட்) மானிய விலையில் உரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

யூரியா 45 கிலோ அதிகபட்ச சில்லறை விலை ரூ242 என விவசாயிகளுக்கு சட்டப்பூர்வமாக நிர்ணயிக்கப்பட்ட விலையில் வழங்கப்படுகின்றது. விநியோகச் செலவுக்கும் நிகர சந்தை விலைக்கும் உள்ள வித்தியாசம் மானியமாக உர நிறுவனங்களுக்கு அரசு தருகின்றது. பாஸ்பேட் மற்றும் பொட்டாசிய உரங்களுக்கு ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியத் திட்டம் 1.4.2010 முதல் அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

உரத் தயாரிப்பாளர்களுக்கும் இறக்குமதியாளர்களுக்கும் மானியத்தை அரசு நேரடிப் பலன்கள் முறை மூலம் செலுத்திவிடுகின்றது. ஏழை மற்றும் விளிம்பு நிலை விவசாயிகள் உட்பட எந்த ஒரு ஆதார் அங்கீகார பயனாளியும் ஆதார் அடிப்படையில் உரங்களை வாங்க முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

அந்த ஒரு கனவு!. தொழில்; ஆடம்பர வாழ்க்கையை துறந்து சிவ பக்தராக மாறிய ஜப்பானிய தொழிலதிபர்!. காவி உடையில் யாத்திரை!

Mon Jul 28 , 2025
விசித்திரமான கனவால், 15 அழகு சாதனப் பொருட்கள் விற்பனை நிலையங்களுக்கு சொந்தக்காரரான ஜப்பான் தொழிலதிபர், தனது தொழிலை துறந்து சிவபக்தராக மாறி காவி உடை அணிந்து யாத்திரை மேற்கொண்டுள்ள சமப்வம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் தலைநகம் டோக்கியோவை சேர்ந்தவர், ஹோஷி தகாயுகி. 41 வயதான இவர், 15 அழகு சாதனப் பொருட்கள் விற்பனை நிலையங்களை நடத்தி வந்துள்ளார். இருப்பினும், இந்து ஆன்மீகத்தையும் சிவபெருமானின் பக்தியையும் முழுமையாக ஏற்றுக்கொள்ள தனது ஆடம்பரமான […]
Japanese businessman shiva devote 11zon

You May Like