மக்களவை உறுப்பினர் உறவினர்கள் 12 பேர் மோர்பி விபத்தில் பலி !!

குஜராத்தில் நடந்த பாலம் விபத்தில் ராஜ்காட் மக்களவை உறுப்பினர் மோகன்குந்தரியாவின் உறவினர்கள் 12 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜ்காட் மக்களவை பா.ஜ.க. உறுப்பினராக மோகன் குந்தரியா உள்ளார். இவரின் உறவினர்களும் நேற்று நடந்த விபத்தில் சிக்கியுள்ளனர். இதில் 12 பேர் உயிரிழந்துவிட்டனர். ஞாயிற்றுக்கிழமை மலை சுற்றிப் பார்க்க சென்றவர்கள் விபத்தில் சிக்கி பலியாகி உள்ளனர். உயிரிழந்த 12 பேரில் 5 குழந்தைகள், 4 பெண்கள், 3 ஆண்கள் ஆவர். அவரது மூத்த சகோதரரின் உறவினர்கள் ஆவார். அனைவரும் மிக நெருங்கிய உறிவினர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், ’’ இந்த விஷயத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். என் அண்ணனின் மனைவிக்கு தம்பி, அவரது மகள்கள், குழந்தைகள் என அவர்களின் குடும்பத்தினர் அனைவருமே விபத்தில் பாலியானார்கள்’’ என கூறினார்.

இவர்கள் அனைவரும் தாங்காரா தாலுகாவில் வெவ்வேறு கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் அனைவரும் மோர்பியில் வசித்து வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றிப்பார்க்க வந்துள்ளனர். இந்த சம்பவம் நடந்து அரை மணி நேரம் கழித்து நான் இங்கு வந்தேன். அனைவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றேன். விபத்து நடந்தது முதல் இங்குதான் இருக்கின்றேன். என தெரிவித்தார்.

இந்த விபத்தில் பல பேர் உயிரிழந்துவிட்டனர். இந்த விவகாரத்தில் பொறுப்பில்லாமல் செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். முதலமைச்சர் பூபேந்திரா படேல் முகாமிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தியுள்ளார்.

Next Post

திடீர் உடல்நலக்குறைவு..!! மூத்த தலைவர் சரத் பவார் மருத்துவமனையில் அனுமதி..!! வெளியான பரபரப்பு அறிக்கை..!!

Mon Oct 31 , 2022
தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரும், மகாராஷ்டிர முன்னாள் மாநில முதலமைச்சருமான சரத் பவாருக்கு இன்று காலை உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சரத் பவாரை தொடர்பு கொண்டு அரசியல் தலைவர்கள் நலம் விசாரித்து வருகின்றனர். தற்போது சரத் பவார் உடல்நிலை சீராக உள்ளதாகவும், வருகிற நவம்பர் […]
திடீர் உடல்நலக்குறைவு..!! மூத்த தலைவர் சரத்பவார் மருத்துவமனையில் அனுமதி..!! வெளியான பரபரப்பு அறிக்கை..!!

You May Like