குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து சிறுமியை சீரழித்த இளைஞர்கள்.!

மத்தியபிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற ஒரு சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. போபலாலை சார்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமியை அங்கிருந்து இரண்டு இளைஞர்கள் பார்ட்டிக்கு அழைத்துச் செல்வதாக கூறி பலமுறை பலாத்காரம் செய்துள்ளனர்.


இது தொடர்பாக, இரண்டு இளைஞர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். தன் வீட்டில் வெளிப்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை பார்ட்டிக்கு போகலாம் அங்கு விதவிதமான உணவுகள் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றுள்ளனர் .

பின்னர் பார்ட்டி முடிந்ததும் அங்கிருந்து அனைவரும் சென்ற பிறகு, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவர் மயங்கியதும் ஒரு இளைஞரின் துணையுடன் மற்றொரு இளைஞர் பலாத்காரம் செய்து இருக்கிறார். இது தொடர்பாக அவர்கள் இருவரையும் காவல்துறை கைது செய்து இருக்கிறது.

1newsnationuser5

Next Post

கடலூரில் நூதன முறையில் மாணவர்களுக்கு போதை மாத்திரை சப்ளை செய்த இளைஞர்.!

Sat Jan 28 , 2023
தமிழகத்தில் சில காலமாகவே கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே போதைப் பொருள்களின் உபயோகம் அதிகமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசும் காவல்துறையும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. அந்த வகையில், கடலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள்கள் சப்ளை செய்து வருவதாக வந்த தகவல்களை டெல்டா பிரிவு போலீசார் தீவிரமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் போதை மருந்துகளை […]
IMG 20230128 WA0075

You May Like