Accident: கடந்த 24 மணி நேரத்தில் சாலை விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு..!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சாலை விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்று வெவ்வேறு இடங்களில் நடந்த கார் விபத்துகளில் இந்த சோகமான சம்பவம் நடைபெற்றுள்ளது.

திருப்பூர் காங்கயம் பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் மற்றும் சித்ரா தம்பதியின் 60-ம் திருமணத்துக்காக குடும்பத்தினருடன் காரில் சென்றனர். மயிலாடுதுறை அருகே உள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். காரை மகன் ஓட்டி வந்துள்ளார். வெள்ளக்கோவில் – காங்கயம் தேசிய நெடுஞ்சாலையில் ஓலப்பாளையம் அருகே திருப்பூரில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தும், எதிரே வந்த காரும் கண்ணிமைக்கும் நேரத்தில் மோதிக் கொண்டன. விபத்தில் 3 மாத கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதே போல மதுரை திருமங்கலம் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக வந்த கார் மோதிய கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்தான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்திய வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மருத்துவ தம்பதிகள் சிவகாசி சென்றுவிட்டு காரில் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே கார் கவிழ்ந்த விபத்தில் மருத்துவ தம்பதி உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Vignesh

Next Post

அடேங்கப்பா!… ஹேர்கட்-க்கு விராட் கோலி எவ்வளவு செலவழிக்கிறார் தெரியுமா?

Thu Apr 11 , 2024
Virat Kohli: இந்தியா பல சிறந்த கிரிக்கெட் வீரர்களை உலகிற்கு அளித்துள்ளது, அந்த வரிசையில் தோல்விகளைக் கண்டு துவளாத விராட் கோலியும் முக்கியமானவர். சச்சின் டெண்டுல்கரின் விடாமுயற்சியையும், ஜாம்பவான் கிரிக்கெட் வீரர்களின் பிட்னஸையும் கலவையாக கொண்ட விராட் கோலி கிரிக்கெட் பயணம் சுவாரஸியமானதுதான். இது ஒருபுறம் இருக்க, தனது ஆடைகள், ஹேர் ஸ்டைலை அவ்வபோது மாற்றி ரசிகர்களுக்கு புதிய லுக்கில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்தவகையில், தற்போது விராட் கோலியின் […]

You May Like