சத்தீஸ்கர் மாநில பகுதியில் ராய்ப்பூரை சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் சென்ற வாரத்தில் காணாமல் போகியுள்ளார். இதனை தொடர்ந்து சிறுமியை பெற்றோர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். இருப்பினும் சிறுமி கிடைக்காமல் போனதால் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சிறுமியின் வீட்டிற்கு அருகில் காலி மனை ஒன்றில் சிறுமியின் உடலானது கண்டெடுக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட விசாரணையாக அங்கிருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்த போது 14 வயதான சிறுவனை அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையில் சிறுமியை கடத்தி சென்றது இந்த 14 வயது சிறுவன் தான் என்பது தெரியவந்துள்ளது. மேலும் ஆள் நடமாட்டம் இல்லாத தனிமையான இடத்திற்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த பிறகு சிறுமியின் கழுத்தை நெரித்தே கொலை செய்துள்ளார் என்று அந்த சிறுவனே குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளான்.
இவரின் வாக்குமூலத்தை கேட்டுக்கொண்டிருந்த சொந்தகாரர்கள் ஆத்திரமடைந்து சிறுவனை கடுமையாக தாக்கினர் . மேலும் அவர்களிடமிருந்து சிறுவனை மீட்டு காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். இந்த நிகழ்வானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.