தென்கொரியா நாட்டில் நடைபெற்ற பாரம்பரிய திருவிழாவின் போது, அதிகமான மக்கள் கூட்டம் ஒன்று சேர்ந்த நிலையில், கட்டுப்பாடின்றி கூட்டம் அலைமோதியதால் குழந்தைகள் உள்பட 149-க்கும் அதிகமான நபர்கள் பலியான சம்பவம் அங்கே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் பலருக்கு காயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மாறுவேடங்களில் உடை அணிந்து வலம் வரும் திருவிழா தென்கொரியாவின் இதோவன் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தின் கடைசி தேதியில் நடைபெறும். ஹாலோவீன் என்று கூறப்படும் இந்த திருவிழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் வருகை தருவார்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட் தொற்று பரவலின் காரணமாக திருவிழா ரத்து செய்யப்பட்ட நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இத்திருவிழா புத்துணர்ச்சியாக துவங்கியுள்ளது. பல்வேறு வகையான பேய் வேடமணிந்து கலந்து கொள்ள குவிந்துள்ளனர். அச்சமயத்தில் அப்போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 130 க்கும் மேற்பட்டோர் மூச்சு திணறி பரிதாபமாக இறந்துள்ளனர்.
மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மீட்பு படையினர் தகவலறிந்து வந்த நிலையில் பலியானவர்களின் உடல்களை மீட்டுள்ளனர். அதனை தொடர்ந்து, காயமடைந்தவர்கள் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நடந்த இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து தென்கொரிய அதிபர் யூன் சூக் யோல் அரசு அதிகாரிகளுடன் அவசரமாக ஆலோசனை நடத்தி இருக்கின்றார்.