தருமபுரி பழைய ரெயில்வே லைன் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரன். இவரது தந்தை தர்மபுரி 8-வது வார்டு வார்டு தி.மு.க. கவுன்சிலராக உள்ளார். இவரது மகள் ஹர்ஷா (வயது 23). மருத்துவ மருந்து பிரிவில் பட்டபடிப்பு முடித்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் கடந்த 6 மாதமாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 5-ந் தேதி தருமபுரியில் இருந்து ஓசூருக்கு சென்ற இந்த பெண் நேற்று காலை அதியமான் கோட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கடத்தூரான் கொட்டாய் அருகே நரசிங்கபுரம் கோம்பை வனப்பகுதியில் கழுத்து மற்றும் உடலில் படுகாயங்களுடன் சடலமாக இறந்த நிலையில் கிடப்பதாக பொதுமக்கள் அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக வந்த போலீசார் பிணத்தை கைப்பற்றி தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். திருமணத்திற்கு வரன் பார்த்து வந்த நிலையில் ஓசூரில் இருந்து பெற்றோருக்கு தெரியாமல் எதற்காக தருமபுரி வந்தார்? கடத்தி வரப்பட்டாரா?அல்லது முன்விரோதம் காரணமாக யாரேனும் இந்த பெண்ணை கடத்தி கொலை செய்தார்களா? என போலீசார் தனிப்படை கொண்டு தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனை வளாகம் மற்றும் அதியமான் கோட்டை போலீஸ் நிலையத்தில் உறவினர்கள் குவிந்ததால் பதற்றம் ஏற்பட்ட நிலையில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
மேலும் போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து கொலையாளியை தேடிவந்தனர். அதியமான் கோட்டை போலீஸ் நிலையத்தில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் என இரு மாவட்ட எஸ்.பி.க்கள் நேரடி விசாரணை நடத்தி வந்த நிலையில் செல்போன் சிக்னல்கள் மற்றும் செல்போன் உரையாடல்களை வைத்து கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளைஞர் மற்றும் தருமபுரி காந்தி நகர் பகுதியை சேர்ந்த ஒரு சிறுவனையும் பிடித்து விசாரணை செய்தனர். இதில் காந்திநகர் பகுதியை சேர்ந்த சிறுவன் ஹர்ஷாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டான். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சிறுவன் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டான். ஹர்ஷாவை கடந்த ஓராண்டாக சிறுவன் காதலித்து வந்ததாகவும், திடீரென தன்னுடனான காதலை முறித்துக் கொண்டதால் அதனை தாங்க முடியாமல் ஹர்ஷா ஊருக்கு வரும்போது தம்முடைய காதலை பிரேக் அப் செய்து கொள்ளலாம் என தனியாக அழைத்துள்ளார். அதை நம்பிய ஹர்ஷா நேற்று முன்தினம் ஓசூரில் இருந்து வேலையை முடித்துவிட்டு தருமபுரிக்கு வந்த அவரை சிறுவன் தனது மோட்டார் சைக்கிளில் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என சிறுவன் மிரட்டியுள்ளார்.
இதை ஏற்றுக்கொள்ளாத நிலையில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதால் ஒரு கட்டத்தில் தனக்கு கிடைக்காத பெண் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற நோக்கத்தில் சிறுவன் துப்பட்டாவை வைத்து ஹர்ஷாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்து அதன் பின் சடலத்தை வனப்பகுதிக்குள் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக போலீசாரிடம் தெரிவித்தார். அதன் பின்னர் போலீசார் சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.