சென்னையில் ஏசியை திருடிய 2️ இளைஞர்கள் அதிரடி கைது…..!

சென்னை மடிப்பாக்கம் குபேரன் நகர் 14வது தெருவில் இருக்கின்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பிரவீன்(31) இவரும் இவருடைய மனைவியும் கடந்த 10ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு பணிக்கு சென்று விட்டனர். இரவு வீடு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் வெளிப்புற சுற்றில் மாட்டி இருந்த குளிரூட்டியின் வெளிபாகம் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.


உடனடியாக இந்த சம்பவம் குறித்து மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் வழங்கினர் அதனை அடிப்படையாகக் கொண்டு, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்தருகே இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஏசியின் வெளிபாகத்தை 2️ இளைஞர்கள் திருடி செல்வது பதிவாகி இருந்தது.

அதனை அடிப்படையாகக் கொண்டு, இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட துறைப்பாக்கம் எல்லையம்மன் நகர் சலீம்(25), அதே பகுதியை சேர்ந்த மோகனகிருஷ்ணன்( 23) உள்ளிட்ட இருவரை நேற்று காவல்துறையினர் கைது செய்தனர்.

அந்த இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், கோடை வெயிலில் இருந்து தப்பி இதமான குளிரில் உறங்க வேண்டும் என்ற ஆசையால் ஏசியை திருடியதாக இருவரும் தெரிவித்துள்ளனர் விசாரணைக்கு பின் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Post

கோவை அருகே…..! காதல் திருமணம் செய்த இளம் பெண் மர்மமான முறையில் மரணம்…..!

Wed May 31 , 2023
கோயமுத்தூர் செல்வபுரம் சேர்ந்தவர் கருப்பசாமி இவருடைய மகன் ரமணி(20) பேரூரில் இருக்கின்ற ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார் இவரும் அதே கல்லூரியின் படித்து வந்த மருத்துவராயபுரம் குறிஞ்சி நகரை சேர்ந்த சஞ்சய் (20) என்ற இளைஞரும் காதலித்து வந்தனர். இதில் குடும்பத்தினர் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் கடந்த 8ம் தேதி வேளாங்கண்ணிக்கு சென்று திருமணம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, ரமணியின் தந்தை செல்வபுரம் காவல் […]
death

You May Like