சென்னை மடிப்பாக்கம் குபேரன் நகர் 14வது தெருவில் இருக்கின்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பிரவீன்(31) இவரும் இவருடைய மனைவியும் கடந்த 10ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு பணிக்கு சென்று விட்டனர். இரவு வீடு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் வெளிப்புற சுற்றில் மாட்டி இருந்த குளிரூட்டியின் வெளிபாகம் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.
உடனடியாக இந்த சம்பவம் குறித்து மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் வழங்கினர் அதனை அடிப்படையாகக் கொண்டு, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்தருகே இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஏசியின் வெளிபாகத்தை 2️ இளைஞர்கள் திருடி செல்வது பதிவாகி இருந்தது.
அதனை அடிப்படையாகக் கொண்டு, இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட துறைப்பாக்கம் எல்லையம்மன் நகர் சலீம்(25), அதே பகுதியை சேர்ந்த மோகனகிருஷ்ணன்( 23) உள்ளிட்ட இருவரை நேற்று காவல்துறையினர் கைது செய்தனர்.
அந்த இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், கோடை வெயிலில் இருந்து தப்பி இதமான குளிரில் உறங்க வேண்டும் என்ற ஆசையால் ஏசியை திருடியதாக இருவரும் தெரிவித்துள்ளனர் விசாரணைக்கு பின் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.