#Breaking: மகாராஷ்டிராவில் பேருந்து தீப்பிடித்து 25 பேர் பலி…!

மகாராஷ்டிராவில் பேருந்து தீப்பிடித்து 25பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் புல்தானாவில் உள்ள சம்ருத்தி மகாமார்க் விரைவு சாலையில் 32 பயணிகளுடன் சென்ற பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது 25 பேர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் புல்தானா சிவில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருவதாக துணை எஸ்பி பாபுராவ் மகாமுனி தெரிவித்தார்.

இச்சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்டது. பேருந்தில் இருந்து 25 உடல்கள் சடலமாக மீட்கப்பட்டன. பேருந்தில் மொத்தம் 32 பேர் பயணம் செய்தனர். 6‌ முதல் 8 பேர் பயங்கரமான தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். காயமடைந்தவர்கள் புல்தானா சிவில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்” என்று புல்தானா காவல்துறை துணை எஸ்பி பாபுராவ் மகாமுனி கூறினார்.

Vignesh

Next Post

தமிழகத்தில் இனி பெண் ஊழியர்களுக்கு இதுக்கட்டாயம்……! மகிழ்ச்சியில் பெண் ஊழியர்கள்……!

Sat Jul 1 , 2023
தமிழகத்தில் மத்திய அரசின் கல்வி மேம்பாட்டு திட்டமான சம்க்ரா சிக்சா திட்டத்தின் கீழ் தற்காலிக பெண் ஊழியர்கள் 12 வாரங்கள் மட்டும் தான் மகப்பேறு விடுமுறையை பெறுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் வழங்கப்பட்டதை தொடர்ந்து இந்த புகாரின் அடிப்படையில், தேசிய மனித உரிமைகள் ஆணையரகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த நடவடிக்கையின் காரணமாக, தற்சமயம் தற்காலிக பெண் ஊழியர்களாக இருப்பவர்களுக்கு […]

You May Like