போரில் 262 விளையாட்டு வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.. உக்ரைன் விளையாட்டு அமைச்சர் தகவல்..

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த ஓராண்டுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது.. இதுவரை இருநாடுகளிடையே நடந்த பேச்சுவார்த்தையில் போரை நிறுத்துவதற்கான எந்த சுமூக உடன்பாடும் எட்டப்படவில்லை.. இதன் காரணமாக, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் ஏற்பட்ட மிக மோசமான அகதிகள் நெருக்கடியாக இந்த போர் பார்க்கப்படுகிறது. இந்த போரில் இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், 13 மில்லியனுக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். எனினும் போர் தொடர்ந்து வருகிறது..


இந்நிலையில் உக்ரைனுக்கு எதிரான போரில், உக்ரைன் நாட்ட சேர்ந்த 262 விளையாட்டு வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 363 விளையாட்டு வசதிகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு விளையாட்டு அமைச்சர் வாடிம் ஹட்சைட் தெரிவித்தார். மேலும், ரஷ்யாவைச் சேர்ந்த எந்த விளையாட்டு வீரர்களும் ஒலிம்பிக் அல்லது பிற விளையாட்டுப் போட்டிகளில் அனுமதிக்கப்படக் கூடாது என்றும் கூறினார்.. ரஷ்ய விளையாட்டு வீரர்கள் அனைவரும் இந்த போரை ஆதரிக்கிறார்கள்.. இந்த போருக்கு ஆதரவாக நடைபெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்கள். எனவே ரஷ்ய விளையாட்டு வீரர்களை ஒலிம்பிக் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் அனுமதிக்க கூடாது..” என்று கூறினார்.

போர் தொடங்கியதில் இருந்து உக்ரைனிய தேசிய அளவிலான விளையாட்டு வீரர்கள் பலர் தங்கள் நாட்டைப் பாதுகாக்க தானாக முன்வந்து ஆயுதம் ஏந்தியுள்ளனர். இந்த ஆண்டு மட்டும் போர் காரணமாக உயிரிழந்தவர்களில் ஃபிகர் ஸ்கேட்டர் டிமிட்ரோ ஷார்பர் மற்றும் 22 வயதான டெகாத்லான் சாம்பியனும் எதிர்கால ஒலிம்பிக் நம்பிக்கையாளருமான வோலோடிமிர் ஆண்ட்ரோஷ்சுக் ஆகியோர் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது..

1newsnationuser1

Next Post

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் எப்போது..? இந்தியாவில் பார்க்க முடியுமா..? விவரம் உள்ளே...

Sun Apr 2 , 2023
2023 ஆம் ஆண்டு முதல் சூரிய கிரகணம் அடுத்த மாதம் 20-ம் தேதி நிகழ உள்ளது.. சூரியன் – சந்திரன் – பூமி ஆகியவை ஒரே நேர் கோட்டில் வரும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு வரும் போது ஏற்படும் வானியல் நிகழ்வாகும்.. இந்த நேரத்தில் பூமியின் குறிப்பிட்ட சில பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்படும்.. எனினும் சூரியனுடன் ஒப்பிடும் போது நிலவின் அளவு […]
solar

You May Like