கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு 04.12.2022 அன்று நடைபெறவிருக்கும் எழுத்துத் தேர்விற்கான நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்யலாம்.
இது குறித்து தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழகத்தில் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர் பணிக்கு டிசம்பர் 4-ம் தேதி தேர்வு நடைப்பெறவுள்ளது. இந்த தேர்வுக்கான நுழைவு சீட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கு நவம்பர் 30 தேதி எழுத்துத் தேர்வு அறிவித்திருந்த நிலையில் தற்போது டிசம்பர் 4 -ம் தேதி தேர்வு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான அறிவிப்பு கடந்த அக்டோபர் மாதம் வெளியானது. அக்டோபர் 10-ம் தேதி முதல் இப்பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கி நவம்பர் 7-ம் தேதியுடன் முடிவடைந்தது.
5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் 21 வயது நிறைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்தனர். இந்த நிலையில் நிர்வாக காரணத்தினால் தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியது. இந்த தேர்வுக்கான நுழைவு சீட்டு விண்ணப்பதார்களுக்கு குறுஞ்செய்தியாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பப்படும். மேலும் நுழைவு சீட்டை https://www.tn.gov.in/ மற்றும் https://cra.tn.gov.in/ என்ற இணையத்தளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பணிக்க உதயமாக அதிகபட்சம் ரூ.31,100 வழங்கப்படும். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் வாசிக்கும் மற்றும் எழுதுதல் திறன் மதிப்பிடப்படும் என்றும், இதற்கு அதிகபட்சமாக 40 மதிப்பெண் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
