2023ல் இந்தியாவில் மாரடைப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28% அதிகரிப்பு!… மத்திய அரசு தகவல்!

2023ல் இந்தியாவில் மாரடைப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 28% ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


இந்தியாவில் மொத்த உயிரிழப்புகளில் 28.1% பேர் மாரடைப்பால் மரணமடைவதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 1990-ல் மாரடைப்பால் இறப்போர் எண்ணிக்கை 15%-ஆக இருந்த நிலையில், 2023-ல் 28% ஆக அதிகரித்துள்ளது. புகை பிடிப்போரில் 32.8% பேர், மது குடிப்போரில் 15.9% பேர், உடலுழைப்பு இல்லாதோரில் 41.3% பேர் மாரடைப்பால் இறந்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

போதிய காய்கறி, பலன்களை உணவில் சேர்க்காவிடில் 98.4% பேருக்கு இதய நோய் ஏற்படலாம் எனவும் மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலையும் கூறியுள்ளது. இதுபோன்று, போதிய உடல் உழைப்பு இல்லாதவர்களின் 41.3% பேருக்கு இதய நோய் ஏற்பட வாய்ப்பு என ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டில் 2021-ல் 14.26 லட்சமாக இருந்த புற்றுநோயாளிகள் எண்ணிக்கை 2022-ல் 14.61 லட்சமாக உயர்ந்துள்ளது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

1newsnationuser3

Next Post

அதிரடி...! நில குத்தகைதாரர்களின் விவரம் மற்றும் ஆதார் எண் கட்டாயம்...! தமிழக அரசு உத்தரவு

Wed Mar 15 , 2023
வேளாண் அடுக்குத் திட்டத்தின் கீழ் நில உரிமையாளர்களின் சாகுபடி விவரம் மற்றும் குத்தகைதாரர்களின் விவரம் மற்றும் அவர்களின் ஆதார் எண்ணுடன் Agri stack amd Grains செயலி மூலம் உள்ளீடு செய்யுமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர்‌ மாவட்டம்‌, பொன்னேரி கோட்டத்திற்குட்பட்ட பொன்னேரி மற்றும்‌ கும்மிடிப்பூண்டி வட்டங்களில்‌ தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளபடி, வேளாண்‌ அடுக்கு மற்றும்‌ GRAINS என்ற திட்டத்தின்‌மூலம்‌, வேளாண்மை உழவர்களின்‌ நலத்திற்காக நில உரிமையாளர்களின்‌ விவரங்கள்‌, சாகுபடி […]
aadhar 1

You May Like