2023ல் இந்தியாவில் மாரடைப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 28% ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மொத்த உயிரிழப்புகளில் 28.1% பேர் மாரடைப்பால் மரணமடைவதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 1990-ல் மாரடைப்பால் இறப்போர் எண்ணிக்கை 15%-ஆக இருந்த நிலையில், 2023-ல் 28% ஆக அதிகரித்துள்ளது. புகை பிடிப்போரில் 32.8% பேர், மது குடிப்போரில் 15.9% பேர், உடலுழைப்பு இல்லாதோரில் 41.3% பேர் மாரடைப்பால் இறந்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது.
போதிய காய்கறி, பலன்களை உணவில் சேர்க்காவிடில் 98.4% பேருக்கு இதய நோய் ஏற்படலாம் எனவும் மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலையும் கூறியுள்ளது. இதுபோன்று, போதிய உடல் உழைப்பு இல்லாதவர்களின் 41.3% பேருக்கு இதய நோய் ஏற்பட வாய்ப்பு என ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டில் 2021-ல் 14.26 லட்சமாக இருந்த புற்றுநோயாளிகள் எண்ணிக்கை 2022-ல் 14.61 லட்சமாக உயர்ந்துள்ளது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.