பள்ளி மாணவனை சாப்பிடச்சொல்லி கட்டாயப்படுத்திய நபர் இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி!

முன்பெல்லாம் போதை பொருள் பழக்கம் இளைஞர்களிடம் மட்டுமே காணப்பட்டது. அதுவும் எங்காவது ஒன்று, இரண்டு என்ற இடங்களில் தான் அந்த போதை பொருள் பழக்கம் இருந்து வந்தது. ஆனால் சமீப காலமாக பள்ளி குழந்தைகளிடையே இந்த போதைப் பொருள்கலாச்சாரம் அதிகரிக்க தொடங்கி விட்டது.


அந்த வகையில், தென்காசி மாவட்டம் வீரகேரளம் புதூரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில் பாவூர்சத்திரம் அருகே உள்ள நாகல்குளத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வாகனம் நாள்தோறும் மாலையில் மாணவர்களை நாகல்குளத்தில் இறக்கி விட்ட பிறகு இரவில் அதே கிராமத்தில் நிறுத்தப்படும். மறுபடியும் மறுநாள் காலையில் மாணவர்கள் பள்ளிக்கு அந்த வாகனத்தில் அழைத்துச் செல்லப்படுவார்கள்.

இந்த இந்த நிலையில், சென்ற வாரம் நாகர்கோளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த பள்ளி வாகனத்தில் 10 வயதிற்கு உட்பட்ட மாணவனுக்கு சிறுவர்கள் சிறுவர் ஒருவகை போதை பொருளை வலுக்கட்டாயமாக கொடுத்து வாயில் வைத்து சுவைத்துப் பார்க்குமாறு தெரிவித்திருக்கிறார்கள். அந்த மாணவனும் அவர்களுக்கு பயந்து அதனை சுவைத்து பார்த்திருக்கிறார். இதனை கைபேசியில் வீடியோ பதிவு செய்த அந்த சிறுவர்கள் அதை வைரலாக்கி விட்டனர். சமூக வலைதளங்களின் மூலமாக நேற்று அந்த காணொளி தென்காசி வட்டாரங்களில் வேகமாக பரவத் தொடங்கியது. பாவூர்சத்திரம் காவல்துறையினர் இது தொடர்பாக தீவிர விசாரணை செய்தனர்.

அந்த விசாரணையில், நாகர்குளம் கிராமத்தைச் சார்ந்த 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் 3 பேர் ஒரு பள்ளி மாணவனுக்கு கட்டாயப்படுத்தி போதை பொருளை வழங்கி பயன்படுத்த சொல்லியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 3 சிறுவர்களையும் கைது செய்திருக்கிறார்கள்.

Next Post

மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்ட பயிற்சியாளர் !போக்சோவில் கைது செய்த போலீஸ்!

Fri Dec 16 , 2022
சில ஆண்டுகளுக்கு முன்னர் ரயில் நிலையம், பேருந்து நிலையம், சாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் தான் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள், பாலியல் குற்றங்கள் உள்ளிட்டவை அதிகமாக இருந்து வந்தனர். ஆனால் தற்சமயம் குழந்தைகள் கோவிலாக நினைத்து செல்லும் பள்ளிகளில் கூட பாலியல் தொந்தரவுகள் பாலியல் வன்கொடுமை உழைத்தவைகள் அதிகரிக்க தொடங்கி விட்டனர் அதுவும் பள்ளியில் மாணவ, மாணவிகள் தங்களுடைய குருவாகப் பார்க்கும் ஆசிரியர்களே இது போன்ற […]
POCSO act in full details in tamil 1

You May Like