மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழப்பு…! மின்னல் வரும் நேரத்தில் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்…!

Thunderstorm 2025

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மின்னல் பாய்ந்து 4 பெண்கள் உயிரிழந்தனர்.


கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த கழுதூர் கிராமத்தில் விவசாயி ஒருவரின் விளை நிலத்தில் மக்காச்சோளத்துக்கு உரம் வைப்பதற்காக அதே ஊரைச் சேர்ந்த தொழிலாளர்கள் நேற்று மாலை வயலுக்குச் சென்றனர். அப்போது லேசாக மழை பெய்து கொண்டிருந்தது. திடீரென மின்னல் பாய்ந்ததில் உரமிடும் பணியில் ஈடுபட்டிருந்த கழுதூர் கனிதா, பாரிஜாதம், சின்ன பொண்ணு, அரியநாச்சி ராஜேஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், தவமணி என்பவருக்கு பார்வை பறிபோனது. தகவலறிந்து வந்த போலீஸார் 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பார்வையிழந்த தவமணி வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மின்னல் தாக்கி ஒரே நேரத்தில் நான்கு பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மின்னல் வரும்போது இதை செய்ய கவனத்தில் கொள்ள வேண்டும்.

மின்னல் வரும்போது, மின்சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், ஜன்னல்கள் மற்றும் கதவுகளுக்கு அருகில் நிற்காமல் இருக்கவும், திறந்தவெளியில் நிற்பதைத் தவிர்க்கவும். மின்னல் தாக்கும் போது, மின்சாதனங்களை அணைத்துவிட்டு, அவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும். மின்சாதனங்கள், மின் இணைப்புகள் மற்றும் உலோகக் கருவிகள் வழியாக மின்னல் செல்லக்கூடும். எனவே, மின்னல் வரும்போது அவற்றை அணைத்துவிட்டு விலகி இருப்பது பாதுகாப்பானது.

குளம், ஏரி, அல்லது ஆறு போன்ற நீர்நிலைகளுக்கு அருகில் இருப்பது ஆபத்தானது. மின்னல் நீர் வழியாகவும் பாயக்கூடும். மின்னல் தாக்கியவர்களுக்கு முதலுதவி செய்ய முயற்சிப்பது ஆபத்தானது. உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள். மின்னல் வரும்போது வீட்டிற்குள் இருப்பது பாதுகாப்பானது. வீட்டிலுள்ள மின்சாதனங்களை அணைத்துவிட்டு, அவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும்.

Vignesh

Next Post

கரூர் 41 பேர் பலியான சம்பவம்...! இன்று முதல் சிபிஐ விசாரணை ஆரம்பம்....! விசாரணை அதிகாரி யார்..?

Fri Oct 17 , 2025
கரூரில் விஜய் பரப்புரை கூட்ட நெரிசல் பலி தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், குஜராத் கேடரைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் குமார், இன்று முதல் தனது விசாரணையை நடத்த உள்ளார். கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரி வில்லிவாக்கம் தினேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை […]
karuru CBI 2025

You May Like