Woww..! தமிழக அரசு வழங்கும் வாரம் ரூ.4,000 உதவித்தொகை…! எப்படி விண்ணப்பிப்பது…? முழு விவரம் இதோ….

தமிழ்நாடு அரசு தமிழ்‌ வளர்ச்சித்‌ துறையின்‌ சார்பில்‌ அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும்‌ திட்டம்‌ ஆண்டு தோறும்‌ செயற்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ்‌ 2023-ம்‌ ஆண்டிற்கு விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க தகுதிகளாக 01.01.2022 ஆம்‌ நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்‌. ஆண்டு வருவாய்‌ ரூ.72,000-க்குள்‌ இருக்க வேண்டும்‌.


வட்டாட்சியர்‌ அலுவலகத்தில்‌ இணையவழியில்‌ பெறப்பட்ட வருமானச்‌ சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள்‌ மற்றும்‌ தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலைச்‌ சான்று தமிழறிஞர்கள்‌ இரண்டு பேரிடம்‌ பெற்று விண்ணப்பத்துடன்‌ இணைக்கப்பட வேண்டும்‌. இதற்கான விண்ணப்ப படிவம்‌ நேரிலோ அல்லது www.tamilvalarchithurai.gov.in என்ற தமிழ்‌ வளர்ச்சித்‌ துறையின்‌ வலைத்தளத்திலோ இலவசமாகப்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

இந்த திட்டத்தின் கீழ்‌ தெரிவு செய்யப்படுபவருக்கு திங்கள்தோறும்‌ உதவித்தொகையாக ரூ.3500/-, மருத்துவப்படி ரூ.500/- அவரின்‌ வாழ்நாள்‌ முழுவதும்‌ வழங்கப்படும்‌. நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை உங்கள் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

Vignesh

Next Post

குட் நியூஸ்...! கல்வி உதவித் தொகைக்கான வருமான உச்சவரப்பு ரூ.2.5 லட்சமாக நிர்ணயம்...! இவர்களுக்கு மட்டுமே...

Wed Mar 22 , 2023
போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகைக்கான வருமான உச்சவரப்பு ரூ. 2.5 லட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும்.. பொருளாதார ரீதியாக நலிவடைந்த மாணவர்கள் மத்திய அரசின் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை பெற ஆண்டு மொத்த வருமானம் 8 லட்சத்திற்கும் குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினராக அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கும் இந்த குடும்பங்களைச் […]
Money 1

You May Like