எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி, 5 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்படும் சம்பவங்களும் தொடர் கதையாகி வருகின்றன. மத்திய அரசின் அழுத்தம் காரணமாக, தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படும் சம்பவம் குறைந்துள்ளது. மேலும் கைது நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. மேலும், மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு, அதை நாட்டுடைமையாக்கும் வேலைகளையும் இலங்கை அரசு செய்து வருகிறது. மேலும், மீனவர்களுக்கு லட்சக்கணக்கில் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
கடந்த வாரம் கூட, தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்த நிலையில், இன்று காலை ராமேஸ்வரத்தை சேர்ந்த 5 மீனவர்கள் விசைப்படகில் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்தாக கூறி கைது செய்தனர். மேலும் அவர்களின் விசைப்படகுகளையும் கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
நெடுந்தீவு மீன்பிடித்து கொண்டிருந்த போது அத்துமீறிய இலங்கை கடற்படையினர் அதிரடியாக கைது செய்தது தெரிய வந்துள்ளது. இலங்கை பருத்தித்துறை கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் அட்டூழியம் செய்வதாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் நேற்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்களை மன்னார் கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படை அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர். கைதான மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.