வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாததால்.. 50 வயது முதியவருக்கு மகளை திருமணம் செய்து வைக்க முயற்சி..!

ஜார்க்கண்ட் மாநில பகுதியில் உள்ள பெண் ஒருவர் அதே பகுதியில் அமைந்துள்ள வங்கிக்கு கடன் வாங்க சென்ற நிலையில், வங்கி அதிகாரிகள் அவர்களுக்கு கடன் வழங்கவில்லை. 


இந்த நிலையில் பணம் கேட்டு வந்த பெண்ணை சந்தித்த சஞ்சய் பெஸ்ரா (50) என்பவர் கடன் தந்துள்ளார். ஆனால் அந்த பெண்ணால் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியவில்லை. 

இதனை தொடர்ந்து அவர் கடன் வாங்கிய பெண்ணின் வீட்டிற்கு சென்று தனது பணத்தை திரும்ப கேட்டுள்ளார். இதனையடுத்து பணத்தை திரும்ப கொடுக்க முடியாததால் தனது மகளையே திருமணம் செய்து வைப்பதாக தெறிவித்துள்ளார். 

இன்று திருமண ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருந்த போது அப்பகுதி மக்கள் சிறுமிக்கு திருமணம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வருவதற்குள் சஞ்சய் பெஸ்ரா அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதனிடையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சஞ்சய் பெஸ்ரா தனது மதத்தின் பெயரை தேவைக்கேற்ப மாற்றி திருமணம் செய்து கொள்ள முயன்றதும், இதனை போல் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

1newsnationuser5

Next Post

கரையை கடந்தது மாண்டஸ் புயல் தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு மழை வானிலை ஆய்வு மைய இயக்குனர் வெளியிட்ட தகவல்!

Sat Dec 10 , 2022
வங்கக்கடல் பகுதியில் கடந்த வாரம் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டது. அதன் பிறகு அந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக உருபெற்றது. இந்த புயல் சின்னத்திற்கு மாண்டஸ் புயல் என்று பெயரிடப்பட்டது. இந்த புயல் சின்னம் காரணமாக, தலைநகர் சென்னையில் கனமழையின் காரணமாக, சென்னையின் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தனர். அதோடு மின்கம்பங்கள், சிக்னல் கம்பங்கள் உள்ளிட்டவை வெகுவாக பாதிக்கப்பட்டனர். கோவளம் கடற்கரை பகுதியில் இருந்த […]
தமிழ்நாட்டில் கனமழை நிச்சயம்..!! மேலிடமே சொல்லிருச்சு..!! வெளுத்து வாங்குமாம்..!! கவனமா இருங்க..!!

You May Like