தமிழகத்தில் 5,583 பள்ளி கட்டிடங்கள் சேதம்..! ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு தகவல்.!

தமிழகத்தில் 5,583 பள்ளி கட்டிடங்கள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் மோசமான நிலையில் உள்ள பழைய பள்ளி கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடம் கட்ட குழு அமைக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த சமூக நல ஆர்வலர் செந்தில் முருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணா பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், ”2021-2022 ஆண்டும் தமிழகத்தில் 2,553 சேதமடைந்த பள்ளிக் கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டுள்ளது. 2022-2023 ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு 3030 சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் அகற்றப்பட இருக்கிறது.

தமிழகத்தில் 5,583 பள்ளி கட்டிடங்கள் சேதம்..! ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு தகவல்.!

ரூ.3,745.28 கோடி செலவில் 6,941 பள்ளிகளுக்கு 40,043 வகுப்பறைகள், 3,146 அறிவியல் ஆய்வகங்கள், 10,470 கழிப்பறைகள், 5,421 குடிநீர் வசதிகள், 8,28,387 மீட்டர் சுற்றுச்சுவர் ஆகியவை செயல்படுத்தப்பட்டுள்ளது. ரூ.106.78 கோடி செலவில் 2,695 பள்ளிகளில் 32 வகுப்பறைகள், 2 ஆய்வகங்கள், 436 கழிவறைகள், 2,270 பள்ளிகளுக்கு குடிநீர் வசதிகள் செய்யப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மோசமான நிலையில் உள்ள பழைய பள்ளி கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடம் கட்ட குழு அமைக்கக் கோரிய வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

CHELLA

Next Post

பல்பிடுங்க சென்ற 30வயது பெண் பலி… அதிகப்படியான மயக்கமருந்து செலுத்தியதால் விபரீதம்…

Thu Sep 22 , 2022
பஞ்சாப் பல் மருத்துவ பல்கலைக்கழகத்தில் பல் பிடுங்கச் சென்ற 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் அதிகப்படியான மயக்க மருந்து செலுத்தப்பட்டதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் கணவருடன் வசித்து வந்தவர் ஸ்ரீமதி (30). இவர் கடுமையான பல் வலி காரணமாக அங்குள்ள பஞ்சாப் மருத்துவமனை மற்றும் மருத்து பல்கலைக்கழகத்திற்கு சென்றுள்ளார். பரிசோதித்த மருத்துவர்கள் பல்லை பிடுங்க வேண்டும் என தெரிவித்திருக்கின்றார்கள். இதற்காக அந்த பெண் காலை […]
பல்

You May Like