இந்திய ரயில்வேயில் காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வெளியாகியுள்ளது. டெக்னீசியன் கிரேட் 3 , டெக்னீசியன் கிரேடு 1 (சிக்னல்), ஆகிய இரண்டு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டெக்னீசியன் கிரேடு மூன்று பிரிவில் 6000 வேலை வாய்ப்புகள் உள்ளன. டெக்னீசியன் கிரேடு 1 (சிக்னல்) பிரிவுக்கு 180 இடங்கள் உள்ளன. மொத்தம் 6180 இடங்கள் காலியிடங்களாக உள்ளன.
வயதுவரம்பு 18 வயதில் இருந்து 30 வயதிற்குட்பட்டு இருக்க வேண்டும். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு கூடுதலாக மூன்று ஆண்டுகள் இருக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கப்பட வேண்டும். rrbchennai.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்திற்கான கட்டணங்கள் பொது பிரிவினருக்கு 500 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் எஸ்சி எஸ்டி பிரிவினர்களுக்கு 250 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஜூலை 28-ம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் தேர்வு தேர்வு நடத்தப்படும். அதன் பிறகு மருத்துவ சோதனை நடத்தப்படும். சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிக்கான ஆணையின் வழங்கப்படும். ரயில்வே துறையில் வேலைக்கு சேர ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும்.