இந்திய ரயில்வேயில் காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வெளியாகியுள்ளது. டெக்னீசியன் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் Technician பணிக்கென காலியாக உள்ள 6238 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10-ம் வகுப்பு, ITI அல்லது டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு 18 வயதில் இருந்து 30 வயதிற்குட்பட்டு இருக்க வேண்டும். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு கூடுதலாக மூன்று ஆண்டுகள் இருக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கப்பட வேண்டும். rrbchennai.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்திற்கான கட்டணங்கள் பொது பிரிவினருக்கு 500 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் எஸ்சி எஸ்டி பிரிவினர்களுக்கு 250 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வரும் 28-ம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் தேர்வு தேர்வு நடத்தப்படும். அதன் பிறகு மருத்துவ சோதனை நடத்தப்படும். சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிக்கான ஆணையின் வழங்கப்படும். ரயில்வே துறையில் வேலைக்கு சேர ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும்.
For More info: https://drive.google.com/file/d/1qTCTYSYVR_mZnH3svxsc26-XXteVpPQr/view?usp=sharing
Read more:இடஒதுக்கீடு கோரி வரும் 20-ம் தேதி பாமக சார்பில் போராட்டம்… தொண்டர்களுக்கு அன்புமணி கடிதம்…!