#சென்னை : 7 மாத குழந்தை மின்சாரம் தாக்கி பலி..! 

சென்னை மாதவரம் பால்பண்ணை 87வது தெருவில் வசித்து வருபவர் சாம்சன். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி புஷ்பராணி.


இந்த தம்பதிக்கு 7 மாத ஆண் குழந்தை உள்ளது. நேற்று சாம்சன் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது புஷ்பராணி சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது, ​​டிவி அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை எதிர்பாராதவிதமாக மின் சாதனத்தை தீண்டியதில் மின்சாரம் பாய்ந்தது. இதனால், மின்சாரம் தாக்கி 7 மாத குழந்தை மயங்கி விழுந்தது. 

மயங்கிய நிலையில் இருந்த மகனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய், அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார். அப்போது மின்சாரம் தாக்கி குழந்தை இறந்தது தெரியவந்தது. இறந்த குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது பார்ப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

1newsnationuser5

Next Post

#டெல்லி: டேட்டிங் ஆப் மூலம் காதலில் விழுந்த மாணவி.. 4 வது மாடியில் இருந்து குதித்த சம்பவம்..! 

Sat Dec 24 , 2022
டெல்லி முகர்ஜி நகரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் டேட்டிங் ஆப் மூலம் வேறு பகுதியை சேர்ந்த இளைஞருடன் பழகியுள்ளார். இந்த பழக்கத்திற்கு பிறகு, அந்த இளைஞன் அந்த பெண்ணை தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளான். இளைஞரின் அழைப்பினை ஏற்று, அவரது வீட்டிற்கு சென்ற கல்லூரி மாணவிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  மாணவிக்கு தெரிந்த இளைஞன், தனது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு, மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றதாக கூறப்படுகிறது. அந்த […]

You May Like