ஹவாலா பணப்பறிவர்த்தனை மூலமாக இலங்கைக்கு கஞ்சாவை கடத்திச் செல்ல முயற்சி செய்த 7 கில்லாடிகள்….! அதிரடி கைது ஆவடி போலீசார் நடவடிக்கை…..!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயிலைச் சேர்ந்த மதன் மற்றும் அம்பத்துரை சேர்ந்த பாபு கங்காராம் உள்ளிட்டோர் ராயபுரத்தைச் சேர்ந்த முகமது ஹாரிஸ் மூலமாக சவுகார்பேட்டை சேர்ந்த ஹவாலா ஏஜென்ட் சீதாராம் கோத்தராவ் மூலமாக பணப்பரிவர்த்தனை செய்து, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சாவை பெற்று அதனை, புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜீவா, ஆரோக்கிய அஜின் உள்ளிட்டோர் மூலமாக பைபர் படகின் இலங்கைக்கு கடத்த முயற்சி செய்தனர்.


இந்த விவகாரம் குறித்து காவல்துறை நடத்து ரகசிய தகவல் கிடைத்துள்ளது. ஆகவே ஆவடி காதல் ஆணையாளர் அருண் உத்தரவின் அடிப்படையில், அம்பத்தூர் உதவி ஆணையர் கிரி மற்றும் அம்பத்தூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் அலமேலு உள்ளிட்டு ஒரு தலைமையில் தனி படை அமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தனிப்படையினர் கடந்த 22 ஆம் தேதி அம்பத்தூர் கள்ளிகுப்பம் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த சமயத்தில் அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான விதத்தில் வருகை தந்த வாகனத்தில், சுமார் 3 கிலோ எடை கொண்ட கஞ்சா மற்றும் 4 லட்சம் ரூபாய் பணம் உள்ளிட்டவை இருந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த அம்பத்தூர் காவல்துறையினர் தஞ்சை மற்றும் பணத்தை பறிமுதல் செய்ததோடு வாகனத்தில் இருந்த மதன்பாபு, கங்காராம் உள்ளிட்ட இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினார்.

அதன் அடிப்படையில், முகமது ஹாரிஸ், சீதாராம் கோத்தராவ் ஆகியோரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து 3️ லட்சம் ரூபாய் பணம் மற்றும் 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அத்துடன் அவர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜீவா, ஆரோக்கியஅஜீன் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிட மிருந்து 50000 ரொக்க பணத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

இப்படி 5 கிலோ கஞ்சா மற்றும் 7.50 லட்சம் 4 சக்கர வாகனங்கள் 2 மற்றும் செல்போன்கள் வெளியிட்டவை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பாபு, முகமது ஹாரிஸ் சீதாராம் கோத்தராவ் ஜீவா உள்ளிட்ட 7 பேரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்

Next Post

குளத்தில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவி வேகமாக வந்த டிராக்டர்…..! அறுந்து விழுந்த மின் கம்பி மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்….!

Mon Jun 26 , 2023
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே குன்னூர் கிராமத்தில் வசித்து வருபவர் அர்ஜுனன் இவருடைய மனைவி லட்சுமி இருவரும் விவசாய கூலி தொழிலாளர்களாக இருந்து வருகிறார்கள். இந்த தம்பதிகளின் மகள் பிரகதீஸ்வரி (18) நாகை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் தான் நேற்று வீட்டின் அருகே இருந்த குளத்தில் பிரகதீஸ்வரி நீராடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டர் […]
death 2

You May Like