பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் குடும்பங்களுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியுடன் இணைந்து, அரசாங்கம் ரூ.2,000 பணத்தை தகுதியுள்ள விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்துகிறது.. ஒவ்வொரு 4 மாதங்களுக்கும், அதாவது ஏப்ரல்-ஜூலை, ஆகஸ்ட்-நவம்பர் மற்றும் டிசம்பர்-மார்ச் என மூன்று தவணைகளில் தலா ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி தகுதியான விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

ஆயிரக்கணக்கான விவசாயிகள் காத்திருக்கும் நிலையில், பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனாவின் 13வது தவணையை விரைவில் வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எனினும், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது…
இந்நிலையில் பிஎம் கிசான் திட்டம் தொடர்பாக விவசாயிகளுக்கு ஒரு குட்நியூஸ் வெளியாகி உள்ளது.. விரைவில் தாக்கல் செய்யப்பட்ட உள்ள 2023 பட்ஜெட்டில், மத்திய விவசாயிகளுக்கான பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் தவணை தொகையை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.. அதன்படி, தற்போது ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்பட்டு வரும் நிலையில், அதனை ரூ.8,000 ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. இந்த 8000 ரூபாய் தலா ரூ.2,000 வீதம் 4 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்றும் தெரிகிறது.
இதனிடையே பிரதமர் கிசான் திட்டத்தின் 13வது தவணை ஜனவரி இறுதியில் விவசாயிகளுக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், சரியான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. 13வது தவணை தேதி அறிவிக்கப்பட்டதும், பிரதமர் மோடி 13வது தவணையை (பிஎம் கிசான் 13வது தவணை) நேரடியாக விவசாயிகளின் கணக்கில் செலுத்துவார். மொத்தம் 13 கோடி விவசாய குடும்பங்கள் இந்த முறை பணம் பெற வேண்டும். எவ்வாறாயினும், e-KYC மற்றும் பிற நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் விவசாயிகளுக்கு மட்டுமே பணம் கிடைக்கும்.
13வது தவணையான ரூ.2,000 பெற தகுதியான விவசாயிகள் தங்கள் e-KYC நடைமுறையை முடித்திருக்க வேண்டும்.. ஒருவேளை இந்த நடைமுறையை முடிக்காத விவசாயிகள், பணத்தைப் பெறுவதை உறுதிசெய்ய விரைவில் செய்யுமாறு அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.