தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றம் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட வேலைநாடுநர்கள் பயனடையும் வகையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் Gr-IV 2022 தேர்விற்கான இலவச மாதிரித்தேர்வு வருகின்ற 17.07.2022 அன்று தருமபுரி மாவட்டம் அவ்வையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 10.00 மணி முதல் 01.00 மணி வரை நடைபெற உள்ளது. மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்தவர்கள் இலவச மாதிரித் தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றம் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. தற்போது தருமபுரி மாவட்ட வேலைநாடுநர்கள் பயனடையும் வகையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் Gr-IV 2022 தேர்விற்கான இலவச மாதிரித்தேர்வு வருகின்ற 17.07.2022 அன்று தருமபுரி மாவட்டம் அவ்வையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 10.00 மணி முதல் 01.00 மணி வரை நடத்தப்பட உள்ளது. இத்தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் http://surl.li/cjigr என்ற Google படிவத்தில் விண்ணப்பிக்கவும். மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண் 04342 296188 வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.