சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை பெண் போலீஸை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார்.
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் தாம்பரம் நோக்கி புறப்பட்ட மின்சார ரயிலின், பெண்கள் பெட்டியில் ஏற முயன்ற ஆண் ஒருவரை கண்டித்ததால், ரயில்வே பாதுகாப்பு படை பெண் போலீஸ் ஆசிர்வாவை, ஆத்திரத்தில் மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார்.
இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை பெண் போலீஸ் ஆசிர்வாவுக்கு நெஞ்சுப்பகுதி, கழுத்துப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக பெரம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.