காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ கடந்த 27-ம் தேதி இத்தாலி நாட்டில் உயிரிழந்தார். இதையடுத்து அவரது இறுதிச்சடங்குகள் நேற்று நடைபெற்றது. அவர்கள் மறைவிற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம், ஜெயராம் ரமேஷ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தங்களது இரங்கல் செய்தியை பதிவு செய்து வருகின்றனர்.
அந்தவகையில் பிரதமர் மோடி, சோனியா காந்தியின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில் பிரதமர் மோடி தாயார் திருமதி பாவ்லா மைனோவின் மறைவுக்கு சோனியா காந்திக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். துக்கத்தின் இந்த நேரத்தில் எனது எண்ணங்கள் உங்களது முழு குடும்பத்துடன் இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.